சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

ராதிகாவுக்கு இப்படி ஒரு சோதனையா! - கலக்கத்தில் ‘சித்தி 2’
Updated on : 05 March 2020

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா, சீரியல் உலகிலும் முன்னனி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. டி.ஆர்.பி-யில் பல வருடங்கள் இந்த சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது. 



 



சித்தி சீரியலை தொடர்ந்து மேலும் பல சீரியல்களை தயாரித்து நடித்து வந்த ராதிகா, தான் தயாரித்த சரித்திரக்கால சீரியல் ஒன்று டி.ஆர்.பி-யில் பின் தங்கியிருந்ததால் அந்த சீரியலை பாதியில் நிறுத்தியதோடு, சன் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி, வேறு ஒரு தொலைக்காட்சிக்காக கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 



 



இதற்கிடையே, சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிய ராதிகா ‘சித்தி 2’-வுடன் கலம் இறங்கினார். முதல் வாரத்திலேயே ‘சித்தி 2’ சீரியல் டி.ஆர்.பி-யில் முதல் ஐந்தில் இடம்பிடித்தது. இதனால், ராதிகா உள்ளிட்ட ‘சித்தி 2’ குழுவின உற்சாகமடைந்தனர்.



 



இந்த நிலையில், ‘சித்தி 2 சீரியல் முதல் ஐந்தில் இருந்து வெளியேறியுள்ளது. முதல் எப்பிசோடுக்குப் பிறகு, அடுத்தடுத்த எப்பிசோட்கள் டி.ஆர்.பி-யில் சரிந்ததால், சித்தி 2 சீரியலுக்கு முதல் ஐந்தில் இடம் கிடைக்காமல் போனது. சீரியலில் மிகப்பெரிய வெற்றிகளை பார்த்த ராதிகாவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக சீரியல் மூலம் பல சோதனைகள் வருகிறது. அந்த வகையில், சித்தி 2 சீரியலும் தற்போது டி.ஆர்.பி-யில் இறங்குமுகமாக இருப்பதால், ‘சித்தி 2’ குழு ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்களாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா