சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு வருமான வரித்துறையினரால் நேர்ந்த கதியை பாருங்கள்
Updated on : 08 March 2020

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தையே இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.



 



ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அதிகமாக சம்பளம் வாங்குவதோடு, சில நிபந்தனைகளையும் போடுகிறாராம். அதில் முக்கியமான நிபந்தனை, படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு நிகழ்வு என்று எந்த புரோமோஷன் நிகழ்வுகளிலும் தான் பங்கேற்க மாட்டேன், என்பது தான். அவரது இந்த நிபந்தனைக்கு ஓகே என்றால் தான், அவர் நடிக்க சொல்கிறாராம்.



 



பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும், அந்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டாதா நயன்தாராவை வருமான வரித்துறையினர் மடக்கியுள்ளனர். ஆம், வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.



 



உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், வருமான வரித்துறையின் அங்கமான ஐ.ஆர்.எஸ் அமைப்பு சார்பில் இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.



 



எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நயன்தாரா, வருமான வரித்துறை நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் என்றால், அந்த துறையின் மீது இருக்கும் பயம் தான் காரணம், என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். 



 



கோடி கோடியாய் நயன்தாராவுக்கு கொட்டிக் கொடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்ய முடியாததை, வருமான வரித்துறையினர் சுலபமாக செய்துவிட்டார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா