சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

நீயெல்லாம் மனுஷனாடா - இயக்குனர் மோகன் மீது அனல் கக்கிய நெட்டிசன்
Updated on : 10 March 2020

கடந்த வாரம் வெளியான ‘திரெளபதி’ மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத நிலையில் அப்படக்குழுவினர் இருக்கிறார். அப்படத்தில் நடித்த ரிச்சர்ட், ஷீலா, இயக்குநர் மோகன் உள்ளிட்ட யாரிடம் நேர்காணல் எடுத்தாலும், அவர்களை விமர்சனம் செய்வது போலத்தான் கேள்விகளை கேட்கிறார்கள். இதனால், மற்றவர்கள் எப்படியோ இயக்குநர் மோகன் கடும் கோபமடைந்துவிடுகிறார்.



 



மேலும், ஒவ்வொரு பேட்டியிலும், “இந்த பேட்டியோட, கமெண்ட பார்க்குறீங்களா....பார்க்குறீங்களா...” என்று அழுத்தமாக கேட்கிறார். மேலும், தான் எடுத்தப் படம், அதில் கூறிய கருத்து மிக சரியானது என்று அழுத்தமாக வாக்கு வாதம் செய்யும் இயக்குநர் மோகன், சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பத்திரிகையாளர்களையும் காட்டமாக சாடியிருந்தார். காரணம், தனது படத்தை சில விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழித்ததால் தான்.



 



 



இப்படி, ஊடகங்கள் வெச்சு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குநர் மோகன் தனது அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில், ”’திரெளபதி’ ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது, அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் மோகன் பதிவுட்டுள்ளார்.



 



அதாவது, தனது அடுத்தப் படமும், ‘திரெளபதி’ போல தான் இருக்கும், உங்களால் என்ன செய்ய முடியும், என்று அவர் சூசமாக சொல்லியிருக்கிறார்.



 



இயக்குநர் மோகனின் இந்த பதிவுக்கு எதிர்ப்பும், ஆதரவும் பெரிகி வரும் நிலையில், நெட்டிசன்களில் ஒருவர், ”Firstu சாதிவெறி..இப்போ மதவெறியா...நீயெல்லாம் மனுஷனாடா....சினிமாவுல புது புது Ideas வைச்சு படம் எடுக்குறவங்களே காணாம போயிடுறாங்க...நீயெல்லாம் ரொம்ப வருஷத்துக்கு தாக்கு பிடிக்க மாட்ட உன் Calender"ல நோட் பண்ணி வைச்சுக்கோ...காவிய இயக்குனரே” என்று கமெண்ட் பதிவிட்டிருக்கிறார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா