சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

தனுஷ் சொல்வதை கேளுங்கள்
Updated on : 21 March 2020

ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் கொரோனா வைரஸ் நாம் எல்லோரையும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது. அப்படி நாம் இருப்பதால் நமது மருத்துவர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.



 



டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வீட்டிலேயே இருப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்.



 



நாளை ஒரு நாள் மட்டுமின்றி இன்னும் சில நாட்களுக்கு மிக அவசியம் என்றால் மட்டும் தேவையான பாதுகாப்புடன் வெளியே செல்ல வேண்டும். அவசிய தேவை இல்லையெனில் யாரும் வெளியேசெல்லாமல் வீட்டிலேயே இருக்கவும். ஒரு சில இளைஞர்கள் அசட்டு தைரியத்தால் வெளியே செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். மற்றபடி அரசு மற்றும் டாக்டர்கள் கூறியவற்றை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம். நாளை மாலை ஐந்து மணிக்கு நமக்காக போராடி வரும் டாக்டர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்வோம். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா