சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா
Updated on : 11 May 2020

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் லீடிங்க ரோலில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.



 



பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சினிமாவில் மட்டுமின்றி மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் புரோக்கன் விங்ஸ் என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டார் ஆண்ட்ரியா. மேலும் திருமணமான நபர் ஒருவருடன் கொண்ட தொடர்பால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாகவும் கூறினார்.



 



இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யார் அந்த நபர் என்ற சர்ச்சையும் எழுந்தது. கிட்டதட்ட ஓராண்டாக படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்த ஆண்ட்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.



 



விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் லாக்டவுனால் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தயாருடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார்.



 





 



அதில் நேற்று என் அம்மா இந்த போட்டோவை எனக்கு அனுப்பி அன்னையர் தினத்தில் இந்த போட்டோவை நீ போஸ்ட் செய்யலாம், நாம் இருவருமே நல்லா இருக்கோம் என்றார். அதனால் இந்த போட்டோவை நான் இங்கு ஷேர் செய்கிறேன்.



 



சென்டிமென்ட்ஸ்கெல்லாம் நான் ஆளில்லை, ஆனால் எல்லா அம்மாக்களும் ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆகையால் அன்னையர் தின வாழ்த்துகள் இன்றும் மற்றும் எல்லா நாட்களும் என குறிப்பிட்டுள்ளார்.



 



அனைவரையும் போலவே தனது லாக்டவுன் நாட்களை வீட்டில் கழித்து வருகிறார் ஆண்ட்ரியா. இருப்பினும், அவர் மியூஸிக் மற்றும் குறும்படங்களில் பிஸியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, அவர் புதிய சிங்கிள் ஒன்றை ரிலீஸ் செய்தார். முன்னதாக லாக் டவுனின் போது, ஆதவ் கண்ணதாசன் இயக்கிய ‘லாக் டவுன்' என்ற குறும்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா