சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கொரோனாவால் பிரபல நடிகை மரணம்
Updated on : 07 December 2020

இந்தியாவின் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், மாநிலம் அளவிலும் கொரோனாவில் தாக்கம் குறைந்து வருகிறது. சென்னையிலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.



 



இதற்கிடையே, தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரபல சீரியல் நடிகையான கெளசல்யா செந்தாமரை, ‘அன்பே வா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.



 



இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி சீரியல் இளம் நடிகை ஒருவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 



’யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய்’, ‘தேரா யார் ஹூன் மெயின்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் திவ்யா பட்நாகர். 34 வயதாகும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.



 



Divya Bhatnagar



 



இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா பட்நாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. அதனால், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.



 



இளம் நடிகை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தி சீரியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா