சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

தடையை மீறிய நடிகை சஞ்சிதா ஷெட்டி
Updated on : 07 December 2020

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.



 


கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த வருடம் பக்தர்கள்  கோயிலுக்குள் செல்லவும், மலைக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. முன்னதாக மகா தீபத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டு அதன்படி குறைந்த அளவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.





இந்த நிலையில், தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி தடையை மீறி திருவண்ணாமலை கோவில் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை சஞ்சிதா ஷெட்டியிடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா