சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

வித்தியாசமான திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்
Updated on : 10 February 2021

கமர்ஷியலாக மட்டும் இன்றி இயல்பான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான விதார்த், வெவ்வேறு ஜானர் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’ மற்றும் ‘அஞ்சாமை’ என ஐந்து படங்களில் தற்போது நடித்து வரும் விதார்த், தனது 25 வது படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.



 



பென்ச்மார்க் பிலிம்ஸ் (Benchmark Fims) நிறுவனம் சார்பில் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை சீனிவாசன் இயக்குகிறார்.



 



 



புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திய சம்பவங்களை பரபரப்பாக சொல்லு நகரும் படத்தில், 



ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வர வேண்டும் என்கின்ற தவிப்பை, படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது. 



 



இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிக்கட்ட நாயகன்), பவுலின் ஜெசிகா (வாய்தா நாயகி), மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.



 



விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். கனல் கண்ணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெயசந்திரன் கலையை நிர்மாணிக்கிறார்.



 



 



இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு இசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா