சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

30 சதவீத கிறிஸ்தவ மக்கள் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு - திடுக்கிடும் தகவல்!
Updated on : 20 March 2021

தமிழகத்தில் வாழ்கின்ற 30 சதவீத கிறிஸ்தவ வாக்காளர்கள், எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கம் இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது.



 



இது குறித்து, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும், ஐ.நா சபை நிறுவனத்தின் அமைதி தூதுவரும், கடந்த 2017 ஆம் ஆண்டின் இந்திய குடியரசு தலைவர் வேட்பாளருமான Rev.Dr.ஜெயசிங் அவர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:



 



கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ் நாட்டில் உள்ள 30 சதவீத மக்களில் 75 சதவீதம் பேர் அதிமுக-வுக்கு ஆதரவு அளித்து வந்தனர். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 30 சதவீதத்தில் 75 சதவீத வாக்களர்கள் திமுக-வுக்கு வாக்களித்தனர். காரணம், மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல, பயத்தின் காரணமாகவே வாக்களித்தனர்.



 



வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில், தமிழகத்தில் உள்ள 30 சதவீத கிறிஸ்தவ மக்கள் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற நிலைபாட்டை எங்களது அகில இந்திய கிறிஸ்தவ நல்வாழ்வு சங்கம் முடிவு எடுக்கும்.



 



தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக அரசும், எதிர் கட்சியாக உள்ள திமுக-வும் இதுவரை அகில இந்திய கிறிஸ்தவ நல்வாழ்வு சங்கத்தை அனுகி எந்த ஆதரவும் கேட்கவில்லை.



 



பொதுவாக கிறிஸ்தவர்கள் சுயமாக சிந்தித்து வாக்கு அளிப்பார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் தேவ ஆலயத்தின் போதகரோ அல்லது பிஷப்போ, அல்லது அரசியல் கட்சிகளில் உள்ள கிறிஸ்தவ அரசியல் தலைவர்களின் பேச்சையோ, கேட்கும் நிலையில் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக இல்லை. அவர்கள் ஜெபத்தில் கடவுளிடம் கேட்டோ அல்லது சுயமாக சிந்தித்து வாக்களிக்கின்றனர்.



 



தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் வாழுகின்ற 30 சதவீத கிறிஸ்தவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. ஆகவே கிறிஸ்தவர்களுக்கு முறையான பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு அளிக்கப்படும்.



 



மேலும் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் தலைவராக உள்ள திரு.எல்.முருகன், அவர்கள் பொருப்பேற்ற பின்பு அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, கிராமங்களில் வாழுகின்ற தலித் கிறிஸ்தவ மக்களுக்கு, ஆதரவு கரம் நீட்டியபடியால், சுமார் 5 சதவீத கிராம தலித் கிறிஸ்தவ மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



இவ்வாறு, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் Rev.Dr.ஜெயசிங் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா