சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

கண்டிஷன் போட்ட நிறுவனம் - சம்மதம் தெரிவித்த நயன்தாரா!
Updated on : 11 August 2021

சினிமாவில் நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தின் வியாபாரமும், லாபமும் அமையும். ஆனால், அதை முறியடித்து நடிகைகளினாலும் அதை செய்ய முடியும் என்று ஒரு சில நடிகைகள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய தமிழ் சினிமாவில் அதை சில வருடங்களாக நிரூபித்து வருபவர் நயன்தாரா மட்டும் தான்.



 



தனது பல காதல் தோல்விகளையும் கடந்து நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் என்ற இயக்குநருடன் காதல் வயப்பட்டதும், அவருடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதும் வெட்ட வெளிச்சம் ஆன பிறகும், நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வருகிறார்.



 



 



இதற்கிடையே நயன்தாரா தயாரித்து நடித்துள்ள முதல் திரைப்படமான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு ஒடிடி நிறுவனம் வாங்கியிருப்பது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.



 



ஆனால், நயன்தாராவோ தனது முதல் தயாரிப்பே இவ்வளவு பெரிய லாபத்தை கொடுத்ததால் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபடுவதோடு, அப்படங்களை நேரடியாக ஒடிடி தளங்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். இதற்காக முன்னணி ஒடிடி தளம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றையும் போட இருக்கிறாராம்.



 



நயன்தாரா படங்களுக்கு இப்படி ஒரு மவுசா!, எப்படி அது!, என்று விசாரிக்கையில், ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்திற்கு தனது நெற்றிக்கண் படத்தை நயன்தாரா, விலை பேசிய போது, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பெரிய தொகையை கொடுக்க முன்வந்த அந்த ஒடிடி நிறுவனம், கண்டிஷன் ஒன்றையும் போட்டதாம்.



 



 



அதாவது, ‘நெற்றிக்கண்’ படத்தை வாங்க நாங்க ரெடி, நயன்தாரா எங்க சேனலுக்கு பேட்டி கொடுக்க ரெடியா? என்பது தான் அந்த கண்டிஷன். இதற்கு நயன் ஓகே சொன்னது மட்டும் அல்ல, அந்த பேட்டியில் அவர்கள், எதை பற்றி கேட்கிறார்களே அதற்கு நயன், பதில் அளிக்க வேண்டும், என்பது தான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.



 



இப்படி ஒரு பேட்டிக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்ததால் தான், அவருடைய நெற்றிக்கண் படம் பெரிய தொகைக்கு வாங்க பட்டது. அது சரி, அந்த சேனல் அப்படி என்ன கேள்வியை கேட்க போகிறது என்று யோசிக்கிறீர்களா?, வேறென்ன நயனின் கல்யாணம் பற்றிய தகவலை தான். நயனும் கிடைத்த வரை லாபம், என்று தனது கல்யாண தகவலை வியாபரமாக்கி கோடிகளை சம்பாதிக்க தொடங்கி விட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா