சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கண்டிஷன் போட்ட நிறுவனம் - சம்மதம் தெரிவித்த நயன்தாரா!
Updated on : 11 August 2021

சினிமாவில் நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தின் வியாபாரமும், லாபமும் அமையும். ஆனால், அதை முறியடித்து நடிகைகளினாலும் அதை செய்ய முடியும் என்று ஒரு சில நடிகைகள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய தமிழ் சினிமாவில் அதை சில வருடங்களாக நிரூபித்து வருபவர் நயன்தாரா மட்டும் தான்.



 



தனது பல காதல் தோல்விகளையும் கடந்து நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் என்ற இயக்குநருடன் காதல் வயப்பட்டதும், அவருடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதும் வெட்ட வெளிச்சம் ஆன பிறகும், நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வருகிறார்.



 



 



இதற்கிடையே நயன்தாரா தயாரித்து நடித்துள்ள முதல் திரைப்படமான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு ஒடிடி நிறுவனம் வாங்கியிருப்பது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.



 



ஆனால், நயன்தாராவோ தனது முதல் தயாரிப்பே இவ்வளவு பெரிய லாபத்தை கொடுத்ததால் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபடுவதோடு, அப்படங்களை நேரடியாக ஒடிடி தளங்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். இதற்காக முன்னணி ஒடிடி தளம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றையும் போட இருக்கிறாராம்.



 



நயன்தாரா படங்களுக்கு இப்படி ஒரு மவுசா!, எப்படி அது!, என்று விசாரிக்கையில், ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்திற்கு தனது நெற்றிக்கண் படத்தை நயன்தாரா, விலை பேசிய போது, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பெரிய தொகையை கொடுக்க முன்வந்த அந்த ஒடிடி நிறுவனம், கண்டிஷன் ஒன்றையும் போட்டதாம்.



 



 



அதாவது, ‘நெற்றிக்கண்’ படத்தை வாங்க நாங்க ரெடி, நயன்தாரா எங்க சேனலுக்கு பேட்டி கொடுக்க ரெடியா? என்பது தான் அந்த கண்டிஷன். இதற்கு நயன் ஓகே சொன்னது மட்டும் அல்ல, அந்த பேட்டியில் அவர்கள், எதை பற்றி கேட்கிறார்களே அதற்கு நயன், பதில் அளிக்க வேண்டும், என்பது தான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.



 



இப்படி ஒரு பேட்டிக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்ததால் தான், அவருடைய நெற்றிக்கண் படம் பெரிய தொகைக்கு வாங்க பட்டது. அது சரி, அந்த சேனல் அப்படி என்ன கேள்வியை கேட்க போகிறது என்று யோசிக்கிறீர்களா?, வேறென்ன நயனின் கல்யாணம் பற்றிய தகவலை தான். நயனும் கிடைத்த வரை லாபம், என்று தனது கல்யாண தகவலை வியாபரமாக்கி கோடிகளை சம்பாதிக்க தொடங்கி விட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா