சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற தீபாவளி குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழிச்சி
Updated on : 28 October 2021

முகப்பேர் வேலம்மாள் பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையுடன் இணைந்து நடத்திய பாதுகாப்பான தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 26.10. 21 அன்று வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீப ஒளித்திருநாளாம்  தீபாவளி அன்று பட்டாசு வெடி விபத்துகளை தவிர்த்து தீபாவளிக் கொண்டாட்டங்களை மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குனர் திருமதி. N. பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட அலுவலர் திரு. சரவணன் அவர்கள் கூடுதல் மாவட்ட அலுவலர்கள் கார்த்திகேயன் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழா நிகழ்வினை தனது உரையுடன் இனிதே துவங்கிய சிறப்பு விருந்தினர் திருமதி      என். பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மாணவர் மனம் கவரும் வகையில் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவது பற்றிய அறிவுரைகளை எடுத்துரைத்து அவர்களை ஊக்குவித்தார். அதன்பின் தொடர்ச்சியாக தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வெடிப்பது எவ்வாறு என்பதை தாமே முன்னின்று பட்டாசுகளை வெடித்து ஒத்திகை செய்து காண்பித்தார். 



 





 



பல்வேறு உத்திகளை அறிமுகப்படுத்திய வீரர்கள் முதன்மையாக தீயணைப்பான்களின் செயல்முறை விளக்கம் எண்ணெய்த் தீ விபத்தினை இருசக்கர வாகனத்தின் உதவியுடன் அணைக்கும் புதிய உத்தி குடிசை தீ மற்றும் மனிதனின் மீதான தீ இவற்றை அணைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை செய்து காண்பித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண நீர்க் கண்காட்சியுடன் நிறைவுசெய்தனர். இந்தச் செயல்முறைகள் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய ஒரு பரந்த வழிகாட்டலை வழங்கின.



 



இறுதியாகத் தமிழ்நாடு தீயணைப்புக் குழுவினரின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு பட்டாசுகள் வெடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரம் மாணவர்கள் கண்டுகளித்தனர். வேலம்மாள் பள்ளி முன்னெடுத்த இந்த உன்னதமான பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்ற நிகழ்வு சமூக அக்கறையுடன் கூடியதாக அமைந்திருந்தது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா