புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 இன் சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்தது பிரைம் வீடியோ
Updated on : 06 January 2022
சுகுமார் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜனவரி 7 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரைம் உறுப்பினர்கள் காணமுடியும்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில் கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்றுகிறார், அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹாத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீடிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலம் புஷ்பா: தி ரைஸ் பார்ட் 1திரைப்படத்தை காணமுடியும் மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது ஏர் டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
மும்பை, இந்தியா – 2022 ஜனவரி 5- இந்தியாவில் மிகவும் அதிகமாக விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் ஒன்றான பிரைம் வீடியோ அல்லு அர்ஜூன் கதாநாயகனாகத் தோன்றும் பரபரப்பான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படமான புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 திரைப்படத்தின் தனிப்பட்ட சிறப்பு ஒளிக்காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்) ஒளிபரப்புவதன் மூலம் இந்த புதிய வருடத்தில் ஒரு மிகச்சிறந்த விருந்தை அதன் பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது. சுகுமார் எழுதி இயக்கி, மைத்ரி மூவி மேக்கர்ஸ், மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்த தெலுங்கு சண்டைத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருக்கிறார், இது குறிப்பிடத்தக்க பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரான ஃபஹாத் ஃபாசில் தெலுங்கில் அறிமுகமாகும் படமாகவும் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சி ஜனவரி 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகும்.
புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச்செல்லும் கிளர்ச்சி மிக்க, மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான கட்டுப்பாடற்ற பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. இதில் புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன் – செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்தப் பகுதிகளில் மிக அதிகளவில் நடைபெற்றுவரும் செம்மரக் கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவரும் கடத்தல்காரர்களின் சாம்ராஜ்யத்தை தகர்க்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளின் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையிலான போராட்ட வரலாறை இது சித்தரிக்கிறது. விறுவிறுப்பான, வலிமையான மற்றும் சிந்தனையைத் தூண்டும் இந்தக் கதைக்களம், நல்லது அல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க இயலாத ஒரு சுழலுக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. அங்கே தீய மனிதர்கள் என்று ஒருவருமில்லை அவர்கள் அனைவருமே பல்வேறு சாயல் கொண்ட கதாநாயகர்கள்தான். ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினரின் ஒட்டுமொத்த பாராட்டையும் இந்தத் திரைப்படம் அள்ளிக் கொண்டது இது வெளியிடப்பட்ட முதல் நாளன்று, அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் ரசிகர் பட்டாளம் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம் அலைமோதியதை இந்தியாவெங்கிலுமுள்ள அரங்கு நிரந்த திரையரங்குகளில் காணமுடிந்தது.
“சாகசக்காட்சிகள் நிறைந்த புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 பொழுதுபோக்குத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்கை) பிரைம் வீடியோவில், வெளியிடுவதன் மூலம் இந்தப் புதிய வருடத்திற்கான ஒரு கிளர்ச்சியான தொடக்கத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம்.” என்று, இந்தியாவின் பிரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர், மெங்க்னானி கூறினார். “உள்ளூர் மொழிகளில் எங்களது பரந்த உள்ளடக்கத்தோடு கூடிய கலைப் பங்களிப்பு தொகுதியில் கூடுதலாக கிளர்ச்சியளிக்கும் ஒரு புதியதாக அமைந்த இந்த அதிக விறுவிறுப்பான திரைப்படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. அல்லு அர்ஜூன், ஃபஹாத் ஃபாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற மிகப் பெரிய முன்னணி நடிகர்கள் தோன்றும் இந்தத் திரைப்படம் அவர்களின் மிகச்சிறந்த நடிப்பாற்றலால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவுடன் கூட்டிணைந்து சண்டைக்காட்சிகள் மற்றும் சாகசம் நிறைந்த இந்த மிகப்பிரம்மாண்டமான திரைப்படத்தை உலகம் முழுவதிலுமுள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்”.
திரைப்படத்தை எழுதி இயக்கிய சுகுமார் கூறினார் “ முதலில் ரசிகர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கு அவர்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்காகவும் மற்றும் இந்தத் திரைப்படத்தை ஒரு வெற்றிக் காவியமாக ஆக்கியதற்காகவும் என் மனப்பூர்வமான நன்றியயைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் இதயமாக விளங்கும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டது. நெருக்கடிமிகுந்த கடும் போட்டி நிலவும் சந்தன செம்மரக் கட்டை கடத்தல் உலகத்தின் ஊடே பார்வையாளர்களை நடத்திச்செல்லவேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாகவே என் மனதை ஆக்கிரமித்திருந்தது. இந்தத் திரைப்படம் நல்லது மற்றும் கெட்டது என்ற விழுமியங்களை தாண்டி அதை விட்டு விலகிச்சென்று, மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சாகச அனுபவத்தை அளிக்கும் கதைக் களமாக இருப்பதை பார்வையாளர்கள் பாராட்டி ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் அழுத்தமான கதை மற்றும் திறமையான கலைஞர்களின் மிகச்சிறப்பான நடிப்பாற்றலோடு கூடிய இதை கண்டிப்பாக பார்த்து ஆழ்ந்து ரசிக்க வேண்டிய ஒரு திரைப்படமாக உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்கு விளங்கச்செய்யும் என்பது உறுதி.”
இந்தத் திரைப்படத்தில் தான் பங்கேற்ற பாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டு அல்லு அர்ஜூன் கூறினார், “ கதையைப் படித்து முடித்த அந்த கணமே, அது எனக்கு மிகவும் பொருத்தமானதாக உணர்ந்தேன். சமூகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர்ந்து மேல் நிலையை அடையும் ஒருவனின் கதை பழைய சலித்துப் போன ஒன்றாகத் தோன்றலாம் ஆனால் இந்தத் திரைப்படத்தில் அவனது பயணம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், மற்றும் அவன் பாத்திரத்துக்கு மெருகூட்டும் குணநலனின் பல அடுக்குகள் மற்றும் நுட்பமான உணர்வுகள் மிகவும் தனித்துவமானவை மற்றும் என் தொழில் வாழ்க்கையில் இதற்கு முன் நான் எப்போதும் செய்திராதவை. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். மற்றும் பிரைம் வீடியோ மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் இந்தத் திரைப்படம் சென்றடையப்போகிறது என்பதை அறிந்து முற்றிலும் உற்சாகமடைந்திருக்கிறேன்.”
“பார்வையாளர்கள் இந்தத் திரைப்படத்தை மிக உயர்வாக பாராட்டுவதை காணும்போது, மாதக்கணக்காக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார்,” அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. கதையின் தனித்துவமான போக்கு மற்றும் அதை வலிமையாக எடுத்துச் சொன்ன விதம் மற்றும் அத்தோடு கூட, பன்முகத்தன்மை கொண்ட பாத்திரப்படைப்புக்கள் இதை உருவாக்கியவர்கள் இந்த திரைப்படத்தை உயிர்ப்புள்ளதாக்க மேற்கொண்ட அளவு கடந்த உழைப்பை வெளிச்சப்படுத்துகிறது.”
தெலுங்கு திரைப்படத்தில் தன் அறிமுகம் குறித்து கூறுகையில் ஃபஹாத் ஃபாசில் சொன்னார், “தெலுங்கு திரைப்படத்துறையில் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 எனது அறிமுகத்தை மிகச்சிறப்பான ஒன்றாகச்செய்திருக்கிறது. என் பாத்திரம் படைக்கப்பட்ட விதத்திலிருந்து, - அதன் தோற்றம், வசனங்கள், மற்றும் சண்டைக் காட்சி வரிசைகள் –அனைத்தின் ஒவ்வொரு கூறுகளும் கதையோடு பின்னிப் பிணைக்கப்பட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அம்மாதிரியான தனித்துவம் வாய்ந்த் கதாபாத்திரத்தை ஏற்க தயார்செய்து கொள்ளும் முயற்சிகளை நான் முழுமையாக ரசித்தேன். பிரைம் வீடியோ தனது சேவைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதின் மூலம் என் நடிப்பின் ஒரு வித்தியாசமான பாணியை உலகெங்கிலுமுள்ள என் ரசிகர்கள் ரசித்து அனுபவிக்கும் விதமாக வழங்குவதில் நான் மிக மிக அதிக உற்சாமடைகிறேன்.” .

Pushpa: The Rise—Part 1 will join thousands of TV shows and movies from Hollywood and Bollywood in the Prime Video catalogue. These include Indian-produced Amazon Original series Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa, Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Tandav, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – Azaadi Ke Liye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, and Inside Edge; Indian films such as Coolie No. 1, Gulabo Sitabo, Durgamati, Chhalaang, Shakuntala Devi, Jai Bhim, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, Penguin, Nishabdham, Maara, V, CU Soon, Soorarai Pottru, Bheema Sena Nala Maharaja, Drishyam 2, Halal Love Story, Middle Class Melodies, Putham Pudhu Kaalai, and Unpaused; and award-winning and critically acclaimed global Amazon Originals like Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy's Jack Ryan, The Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel. All this is available at no extra cost for Amazon Prime members. The service includes titles in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.
Prime members will be able to watch Pushpa: The Rise—Part 1 anywhere and anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, etc. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets, and watch anywhere offline at no additional cost. Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually or ₹179 monthly, new customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.
ABOUT AMAZON PRIME VIDEO
Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place. Find out more at PrimeVideo.com.
● Included with Prime Video: Thousands of acclaimed TV shows and movies across languages and geographies, including Indian films such as Shershaah, Toofaan, Sardar Udham, Coolie No. 1, Gulabo Sitabo, Shakuntala Devi, Sherni, Durgamati, Chhalaang, Hello Charlie, Cold Case, Narappa, Sara’s, Sarpatta Parambarai, Kuruthi, #HOME, and Tuck Jagadish, along with Indian-produced Amazon Original series like Mumbai Diaries 26/11, The Last Hour, Paatal Lok, Bandish Bandits, Breathe, Comicstaan Semma Comedy Pa, The Family Man, Mirzapur, Inside Edge, and Made In Heaven. Also included are popular global Amazon Originals like The Tomorrow War, Coming 2 America, Cinderella, Borat Subsequent Moviefilm, Without Remorse, The Wheel of Time, American Gods, One Night in Miami…, Tom Clancy's Jack Ryan, The Boys, Hunters, Cruel Summer, Fleabag, The Marvelous Mrs. Maisel, and many more, available for unlimited streaming as part of a Prime membership. Prime Video includes content across Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.
● Instant Access: Prime Members can watch anywhere, anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, and multiple gaming devices. Prime Video is also available to consumers through Airtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost.
● Enhanced experiences: Make the most of every viewing with 4K Ultra HD- and High Dynamic Range (HDR)-compatible content. Go behind the scenes of your favourite movies and TV shows with exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with select mobile downloads for offline viewing.
● Included with Prime: Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually or ₹179 monthly. New customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.
He’ll fight. He’ll run. He’ll jump. But he won’t succumb!
Watch #PushpaOnPrime
சமீபத்திய செய்திகள்
இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். 'குற்றம் புதிது' படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார்.
நடிகை சேஷ்விதா கனிமொழி, "நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் 'குற்றம் புதிது'. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை" என்றார்.
நடிகை பிரியதர்ஷினி, " இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
'கெவி' பட இயக்குநர் தமிழ் தயாளன், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தாக் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம்".
தயாரிப்பாளர் கணேஷ், " எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும். வாழ்த்துக்கள்".
நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், " படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்கள் பற்றி மீடியாக்கள் பேசி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்".
தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், " சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.
இயக்குநர் பேரரசு, " வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்".
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், " கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது 'குட்'டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி".
இயக்குநர் ஹரி உத்ரா, " இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவேன் என்று நம்பிக்கையோடு வெளியிடும் ஹரி உத்ராவுக்கு நன்றி. இயக்குநருடைய ஆசை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று இறங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். தருண் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும். கடைசி வாரங்களில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் படம் எடுப்பதை விட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்னும் மெனக்கெட வேண்டும். சிறு படங்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே சினிமா துறை வளரும்".
உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா " கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் 'குற்றம் புதிது' ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".

Read More
நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் 'கணக்கு எப்படி இருக்க?' என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன்.
கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், '' பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது.
இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம்.
இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு.
எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.
இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும்.
இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.
இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 'டண்டனக்கா டான்' என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த 'அக்யூஸ்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,'' என்றார்.
Read More
'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்
தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…
எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்..
பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.
கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்ததற்கு நன்றி. இரண்டு பாடல்களில் ஒன்றை தேவா சார் பாடி இருப்பது எனக்கு பெருமை. டீசருக்கான பாடலை ஒரு வில்லுப்பாட்டு போன்று 20 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தேன். கதாநாயகி பற்றி நான் எழுதி இருந்த பாடல் வரியை குறிப்பிட்டு தேவா சார் பாராட்டினார். தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்குவது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல பெரிய விஷயம் என்றார்
ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் பேசியதாவது…
படத்தை முழுதாக நான் பார்த்துவிட்டேன். தந்தை பெரியார் கருத்தை அழகாகவும், சிறப்பாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள். ஒரு பெண்ணின் பார்வையில் படத்தைச் சொன்னதற்குப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நடித்த அனைவருக்கும் பட ரிலீஸுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகளும் பெரிய பேரும் கிடைக்கும். ஆனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹிரோயின் வரவே இல்லை. ஏதோ வெப் சீரிஸ் வாய்ப்பில் அவர் பிஸியாகிவிட்டார் என்றார்கள். கஷ்டப்பட்டு இவர்கள் எடுத்த படத்தால் பிரபலமாகிவிட்டு, பட விழாவிற்கு வராமல் இருப்பது குற்றம். இனிமேல் படத்தில் புக் செய்யும்போதே அவர்கள் விழாக்களுக்கும் வர வேண்டுமென ஒப்பந்தம் போட வேண்டும்.. படக்குழுவினர் அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் கௌரி சங்கர் எந்த விளம்பரமும் இல்லாமல் பல சமூகப் பணிகள் செய்து வருகிறார். அவரது மனதுக்காக கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா பேசியதாவது….
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி.. என் இசையில் பாடிய இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு நன்றி.. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்..
நடிகர் சௌந்தர்ராஜா பேசியதாவது….
கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். தயாரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி என்றார்
இயக்குநர் SS முருகராசு பேசியதாவது…
இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச்சிறந்த படம், இனி நீங்கள் தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது…
என் நண்பன் விஜய் கௌரிஷை ஹீரோவக்க வேண்டும் என்று தான் இந்தப்படத்தை ஆரம்பித்தோம். அதிலும் இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஏன் நடிக்கிறாய் என கேட்டேன். என்னுடைய தயாரிப்பான கடாவர் சீரிஸில் துணை நடிகராகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். அவன் சின்ன சின்னதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியுள்ளான். இது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய படம். அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும். இந்தப்படத்தில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார் என்றவுடன் சந்தோசமாகிவிட்டது. இனி அவர் இப்படத்தை எடுத்துச் சென்று விடுவார். கௌரிஷ் பல சமூக அக்கறைமிக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்னொரு விஜய் சேதுபதியாக வருவான்.. இயக்குநர் அவ்வளவு அழகாக இப்படத்தினை எடுத்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. என்றார்.
தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…
இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது என்னுடைய அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது.. சின்ன படங்கள் எடுப்பதில் படம் எடுப்பதைத் தாண்டி படத்தை விளம்பரப் படுத்துவதில் தான் இருக்கிறது.. அதை மிகச்சிறப்பாக தனஞ்செயன் சார் செய்து வருகிறார்.. அவர் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
கடுக்கா படத்தை வாழ்த்த நிறையப் பிரபலங்கள் வந்துள்ளார்கள். படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்து விட்டார்கள். பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் இந்த தயாரிபபளர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். சினிமாவில் நாம் சரி செய்ய வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு ஷோ தருகிறார்கள், எந்த ஷோ நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால் அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால் இப்போது ஒரே படத்தை எல்லாத் தியேட்டரிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை ஓட விடமால் செய்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 ஷோ தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள் தான் பெரிய வெற்றியைத் தரும். கடுக்கா மிகச்சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
நாயகன் விஜய் கௌரிஷ் பேசியதாவது..
மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் இன்ஸ்பிரேஷன். அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தேவா சாருக்கு நன்றி. இப்பாடலுக்கு வரவேற்பைப் ஏற்படுத்தித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தில் எல்லோருமே எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். டிரெய்லரில் காட்டாத ஒரு விசயத்தைப் படத்தில் வைத்துள்ளோம். கதையில் தான் பிரம்மாண்டத்தை வைத்துள்ளோம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். நாங்கள் நல்ல படம் தந்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. கடுக்கா சின்ன டீம் செய்துள்ள நல்ல படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
இப்படம் அட்டகத்தி படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால் தான் CV குமாரை விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்கள் பார்க்கிறேன்.. நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அப்படி படம் பார்த்தபோதே சில திருத்தங்கள் சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச்சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள். அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன். நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாளை நமதே படத்திற்கும் நான் உதவி செய்திருந்தேன் 50 லட்சத்தில் எடுத்த அந்த படத்திற்கு மிகச்சிறப்பான ரிவ்யூ தந்தீர்கள். மிகப்பெரிய வெற்றியைத் தந்தீர்கள். அதே போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
Read More