சற்று முன்

150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |   

சினிமா செய்திகள்

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை !
Updated on : 20 September 2022

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.



 



மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது தடபுடலாக தயாராகிவிட்டது. இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் பான் இந்தியா படமாக கலக்க வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திரங்கள் பலரும் குழுமியுள்ள இந்த படம் சோழ வம்ச வரலாறு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவானதாகும். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இந்த நாவலை படமாக்க பல தலைமுறை நடிகர்கள் முயற்சித்து விட்ட நிலையில் தற்போது இதனை நனவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம்.



 



படம் திரைக்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்தான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.



 



அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்தில் நடித்துள்ள ரோலுக்கு வேறொரு நடிகையை  தன் முதலில் மணிரத்தினம் ஒப்பந்தம் செய்துள்ளாராம். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.



 



முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐஸ்வர்யாராயின் நந்தினி கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழிவாங்கும் முகம் அழகானது என்ற தலைப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் பழுவூர் ராணியாக இவர் நடித்துள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க ரேகாவை தான் முடிவு செய்து இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மணிரத்தினம் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா