சற்று முன்
சினிமா செய்திகள்
நடிகர் விஜய்யின் புதிய கார் விலை உங்களுக்கு தெரியுமா???
Updated on : 29 April 2015
தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு கார்கள் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவார்கள். அதேபோல் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவும், சொகுசாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில் தவறில்லை. பொதுவாக, பாலிவுட் பார்ட்டிகள்தான் கோடிகளை கொட்டி கார் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், அவர்களை விஞ்சும் திறமைசாலிகள் அதிகரித்திருக்கும், கோலிவுட்டிலும், கோடிகளை கொட்டி கார் வாங்கும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அவ்வாறு, கோலிவுட் பிரபலங்களிடம் இருக்கும் கார் மாடல்களையும் அதன் விலைபட்டியலையும் இப்போது காணலாம்.
01. ரஜினிகாந்த் கார்: பல நடிகர்கள் சினிமாவில் நடிப்பதைவிட படாடோபமாக வெளியில் நடந்து கொள்வார்கள். ஆனால், அதற்கு நேர்மாறான குணமுடைய ரஜினிகாந்த் திரையில் சூப்பர்ஸ்டாராக ஜொலித்தாலும், நிஜ வாழ்வில் எளிமையை விரும்புபவர். அவரது எளிமை பல நேரங்களில் ஆச்சரியப்படுத்தும் விஷயம். அதில், அவர் காரும்கூட ஆச்சரியப்படுத்தும் விஷயமே. ஆம், அவரிடம் டொயோட்டா இன்னோவா கார் இருக்கிறது. இதுவரை சொகுசு கார்களை அவர் நினைத்து பார்க்கவில்லை. பாலிவுட் பாதுஷா என அழைக்கப்படும் ஷாரூக்கான் பிரியத்துடன் பரிசளித்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அன்போடு மறுத்துவிட்டார் என்பது நினைவிருக்கலாம். இன்னோவா தவிர்த்து, பிரிமியர் பத்மினி, அம்பாசடர் போன்ற கார்களையும் ரஜினிகாந்த் பயன்படுத்தினார்.
02. கமல்ஹாசன் கார்: நடிப்பில் பலருக்கு முன்னுதாரணமாய் திகழும் நடிகர் கமல்ஹாசனிடம் ஆடி ஏ8எல் சொகுசு கார் இருக்கிறது. அவருக்கு பிடித்தமான மாடலாக இருப்பதால், தினசரி பயன்பாட்டிலும் இந்த கார் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், சிம்மாசன உணர்வை தரும் இருக்கைகள் உள்பட பாதுகாப்பு வசதிகளும் ஏராளம். இந்த காரில் 250 பிஎஸ் பவரையும், 580என்எம் டார்க்கையும் வழங்கும் வி8 எஞ்சின் உள்ளது. மணிக்கு 200 கிமீ வேகத்தை சாலை நிலை ஒத்துழைத்தால் எளிதாக தொட்டுவிடும். ரூ.1.53 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கமலிடம் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியும் உள்ளது.
03. விக்ரம் கார்: தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் சிரத்தையுடன், புதிய பரிமாணங்களில் நடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். இவரிடம் இரண்டு ஆடி கார்கள் உள்ளன. அதில், ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் அவரது எண்ணத்திற்கும், திரையுலகில் பெற்றிருக்கும் பிம்பத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். கடந்த 2006ம் ஆண்டில் பாரிஸ் மோட்டார் ஷோ மூலம் வெளியுலக்கு வந்தது. ரூ.2 கோடியையொட்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
04. யுவன்ஷங்கர் ராஜா கார்: முன்னணி இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் அஸ்டன் மார்ட்டின் வாண்டேஜ் கார் இருக்கிறது. அதிசக்திவாய்ந்த இந்த காரில் 313 பிஎச்பி பவரை அளிக்கும் 4,735சிசி பெட்ரோல் எஞ்சின் இருக்கிறது. இந்த கார் ரூ.3.34 கோடி விலை கொண்டது.
05. ஹாரிஸ் ஜெயராஜ் கார்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் லம்போர்கினி அவென்டேடார் எல்பி700 ஸ்போர்ட்ஸ் கார் இருக்கிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த மாடலில் ஈசிஆர் ரோட்டில் ரவுண்டு செல்வதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக அவ்வப்போது படங்களும், செய்திகளும் அடிபடுவதுண்டு. ரூ.5.75 கோடி விலை மதிப்பு கொண்டது. ஹாரிஸிடம் ஒரு மஸராட்டி கார் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
06. சிலம்பரசன் கார்: சிம்புவிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 க்ராஸ்ஓவர் மாடல் இருக்கிறது. தனித்துவமான பாடி ஸ்டைல் கொண்ட இந்த சொகுசு கார்தான் அவரது ஆஸ்தான வாகனமாக இருந்து வருகிறது. இந்த கார் ரூ.80 லட்சம் விலை கொண்டது.
07. த்ரிஷா கார்: நடிகை த்ரிஷாவிடம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு கார் உள்ளது. சிறப்பான இடவசதி, சொகுசு வசதிகள் நிரம்பிய இந்த கார்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு உதவுகிறதாம். ரூ.60 லட்சம் விலை மதிப்பு கொண்டது.
08. சந்தானம் கார்: நகைச்சுவை நடிகர் சந்தானத்திடம் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி உள்ளது. பிரத்யேகமான பாடி ஸ்டைல் இந்த காரின் பலம். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதுதான் சந்தானத்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.
09. சூர்யா கார்: மாஸ் நடிகராக உயர்வு பெற துடித்துக் கொண்டிருக்கும் சூர்யாவிடம் ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக் கார் சொகுசு கார் இருக்கிறது. இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. ரூ.86 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. சூர்யாவின் அனைத்து தேவைகளும் கச்சிதமாக இந்த கார் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற கார் மாடலாக கூறலாம்.
10 விஜய் கார்: ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வாடிக்கையாளரின் பின்னணியை பார்த்தே ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் காரை விற்பனை செய்யும். எனவே, இந்த ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் விஜய் இணைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அவரிடம் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் மாடல் இருக்கிறது. ரூ.3.5 கோடி மதிப்புடையது.
சமீபத்திய செய்திகள்
‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் ‘அன்பே டயானா’ திரைப்படம் தற்போது இசை உலகில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் கதாநாயகனாக மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய மூன்றையும் கவனித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தனித்துவமான கதைகளைக் கொண்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’யை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் பரத் சங்கர் அமைத்துள்ள உற்சாகமான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், பெயருக்கேற்றபடி சென்னை பெரம்பூர் பகுதியின் தனித்துவமான வாழ்க்கை முறை, கலகலப்பான சூழல் மற்றும் மக்களின் இயல்பான உணர்வுகளை உயிரோட்டமாக திரையில் கொண்டு வந்துள்ளது.
இந்தப் பாடலில் பாரி இளவழகன் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரம்யா ரங்கநாதனும் உற்சாகமாக இணைந்து ஆடி பாடலை மேலும் ஜாலியான அனுபவமாக மாற்றுகிறார். அதோடு, மேக்கிங் வீடியோவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ரோஜாவின் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
‘பெரம்பூர் கானா’ பாடல், லோக்கல் பீட்ஸ், வண்ணமயமான காட்சிகள் மற்றும் இளமை கொண்டாட்டம் ஆகியவற்றின் கலவையாக அமைந்து, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண பாடலாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சார அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்தப் படத்தில் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஷெல்லி கேலிஸ்ட் கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை மகேந்திரன் செய்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘அன்பே டயானா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.
இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வினில்..,
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,
இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.
யோகேஷ்வரன் பேசியதாவது..,
என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
பா ரஞ்சித் பேசியதாவது..,
செந்தில் சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.
நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting-ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.
இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக், எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன் மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”
இயமைசைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”
நடிகை அபர்ணதி பேசியதாவது..,
முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும், ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
நடிகை பவானி பேசியதாவது..,
முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.
நடிகை சங்கீதா பேசியதாவது..,
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.
‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருந்தது.
அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.
இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,
“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.
எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.
பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.
இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,
முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.
‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்த
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா, “முதல் முதலாய்” என்ற இன்டி மியூசிக் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் அவர் நடனமும் நடிப்பும் செய்து கவனம் பெற்றுள்ளார்.
இந்த பாடலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார். பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடித்தும், நடனமாடியும் உள்ளார். மெலோடி மற்றும் ராப் கலந்த இந்த பாடலில், ராப் பகுதியை ஆதித்யா பாடியுள்ளார்.
இந்த பாடலில் காதல், இனிமையான நினைவுகள் மற்றும் இளமை உணர்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இதை விரும்பி வருகிறார்கள்.
இந்த பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.பி. குருதேவ் செய்துள்ளார். நடனத்தை சுரேன் அமைத்துள்ளார். ரிஷி தேவா மற்றும் கைராவின் ஸ்டைல், நடனம் ஆகியவை இளமை உணர்வுடன் இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிஷி தேவா – ஜி.வி. பிரகாஷ் குமார் – ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவான “முதல் முதலாய்” ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், பிரபுதேவா நடனமாடி பிரபலமான “சிக்கு புக்கு ரயிலே” பாடலை சிறுவயதில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருந்தார். அதேபோல், இப்போது பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் இந்த ஆல்பத்தையும் அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“முதல் முதலாய்” பாடலை சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!
இந்தியாவில் பிரபலமான ஓடிடி தளமான Prime Video, ‘Prime Video Presents’ நிகழ்ச்சியில் 55-க்கும் மேற்பட்ட புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்களை அறிவித்துள்ளது. இது இதுவரை அவர்களின் மிகப்பெரிய அறிவிப்பாகும்.
Hrithik Roshan-இன் HRX Films, Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற புதிய நிறுவனங்களுடன் இணைந்து, Dharmatic Entertainment, Excel Entertainment, Tiger Baby Films உள்ளிட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் Prime Video புதிய கதைகளை உருவாக்க உள்ளது.
இந்த புதிய தொகுப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. The Revolutionaries, Matka King, Raakh, Lukkhe, Vansh போன்ற புதிய தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், Farzi Season 2, Panchayat Season 5, Call Me Bae Season 2, Dahaad Season 2 போன்ற பிரபல தொடர்களின் புதிய சீசன்களும் வரவிருக்கின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளடக்கங்களும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன. Vadhandhi Season 2, Inspector Rishi Season 2, Exam போன்ற படைப்புகளும் இதில் உள்ளன.
Prime Video தற்போது திரையரங்கு படங்களிலும் கவனம் செலுத்துகிறது. Amazon MGM Studios மூலம் புதிய இந்திய திரைப்படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. Raftaar, VIBE, Dilkashi, Nayyi Navelli, Kuku Ki Kundli போன்ற படங்கள் தயாராகின்றன.
இந்தியாவில் Prime Video மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல மொழிகளில் உள்ள கதைகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். இந்தியாவில் தயாராகும் உள்ளடக்கங்கள் உலகளாவிய ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
Prime Video, புதிய கதைகள், பெரிய தயாரிப்புகள் மற்றும் பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.
ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (LIK) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டீசரும் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் மற்றும் காதல் கலந்து உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கும் கதையாக, ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் கதை இதில் சொல்லப்படுகிறது. காதல் அரிதாக மாறிய உலகில் நடக்கும் இந்த கதை, புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். சீமான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை அனிருத் அமைத்துள்ளார். எடிட்டிங்கை பிரதீப் ஈ. ராகவ் செய்துள்ளார். கலை இயக்கத்தை டி. முத்துராஜ் கவனித்துள்ளார்.
இந்த படம் ஒரு குடும்பம் முழுக்க பார்க்கும் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ். எஸ். லலித்குமார் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படம் ஏப்ரல் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும். ட்ரெய்லர் மற்றும் மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
“சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு
‘சம்பாலா’ படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு, அந்த படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம், மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் இணைந்து புதிய படத்தை தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு, முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா” மூலம் வெற்றி பெற்றவர்கள்.
இந்த புதிய பட அறிவிப்புக்காக ஒரு சிறப்பான கான்செப்ட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிங்கமும் ஓநாயும் நேருக்கு நேர் மோதுவது போல காட்டப்பட்டுள்ளது. இது அதிகாரம் மற்றும் வலிமையின் மோதலை குறிக்கிறது. நடுவில் பழமையான வாள் காட்சி இடம்பெற்றுள்ளது. “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை… சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற வரியும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் இந்த படத்தில் புதிய விதமான கதாபாத்திரத்தில், மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
“சம்பாலா” படத்தை எடுத்த அதே குழு மீண்டும் இணைவதால், இந்த படத்தை இன்னும் பெரிய அளவில், உயர்ந்த தரத்தில் உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், சந்தீப் கிஷனின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. காட்சி அமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கதை சொல்லல் அனைத்திலும் புதுமை இருக்கும்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகிறது. பல மாநில ரசிகர்களையும் கவரும் வகையில் தயாராகிறது.
Shining Pictures நிறுவனம், “சம்பாலா” படத்தில் காட்டிய தரத்தை விட இன்னும் சிறப்பாக இந்த படத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கதையை தற்போது ரகசியமாக வைத்துள்ள நிலையில், ஃபேண்டஸி மற்றும் மசாலா அம்சங்கள் கலந்து இருக்கும் படம் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் வெளியாகும். தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!
‘காளிதாஸ்’ (2019) படத்தின் வெற்றிக்கு பிறகு, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘கேம் பிளே’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையுடன், “கதையே ஹீரோ” என்ற எண்ணத்தில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படம் பைனான்ஸ் குற்றங்களை மையமாக கொண்டு உருவாகிறது. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த, சஸ்பென்ஸ் மற்றும் விசாரணை கதையாக படம் இருக்கும். தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத விதமாக, புதிய களம் மற்றும் கதையுடன் இந்த படம் உருவாகியுள்ளது.
“Exit is an Illusion” என்ற வரியுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்ணாடி உடைந்த மாதிரி பின்னணியில், கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்டப்பட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர்கள் கிஷோர் மற்றும் ‘HeartBeat’ சீரியல் மூலம் பிரபலமான சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான், சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா செய்துள்ளார். எடிட்டிங்கை புவன் சீனிவாசன் கவனித்துள்ளார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் படம் தயாராகி வருகிறது.
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதி பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய காலத்தின் காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கிய திரைப்படம் “நீ Forever”. இது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையும் காதலும் எப்படி இருக்கிறது என்பதை சொல்லும் படம். இப்படம் மார்ச் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
“தருணம்” என்ற வெற்றி படத்திற்கு பிறகு, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் இணைந்து தயாரித்த இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினரும் பத்திரிக்கை நண்பர்களும் கலந்து கொண்ட கோலாகலமான நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...,
இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,
முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.
டாக்டர் வித்யா பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.
நடிகை சினேகா சக்தி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,
நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.
நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..,
முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி
நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..,
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.
முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது. இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது. இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இன்றைய Gen-Z தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"நீ Forever" படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.
‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!
பயமுறுத்தும் காட்சிகளும், தேவையில்லாத நகைச்சுவையும் இல்லாமல் உண்மையான பயத்தை தரும் ஹாரர் படங்கள் அரிதாக தான் வருகிறது. அந்த வகையில், டிமாண்டி காலனி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடித்த இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது பாகம் டிமாண்டி காலனி 3 மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இதில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் பின்னணி (BTS) காட்சிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பலர் இதில் நடித்துள்ளனர்.
இசையை சாம் சி.எஸ் அமைக்கிறார். ஒளிப்பதிவை சிவகுமார் விஜயன் கவனிக்கிறார். எடிட்டிங்கை குமரேஷ் டி செய்கிறார்.
‘டிமாண்டி காலனி 3’ படம் இந்த கோடையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் அவரது குழு தயாரிக்கின்றனர். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசமான பய அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்
மும்பை, மார்ச் 18, 2026: சில திரைப்படங்கள் பார்த்த பிறகும் மனதில் நீண்ட நேரம் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மேட் இன் கொரியா உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில், நடிகை பிரியங்கா மோகன் நடித்த இந்த படம், Netflix தளத்தில் வெளியாகி பெரிய சாதனை படைத்துள்ளது. ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து, 24 நாடுகளில் டிரெண்டாகி வருகிறது.
மார்ச் 12 அன்று வெளியான இந்த படம், தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை சொல்லுகிறது. கதையின் உணர்வு, அழகான காட்சிகள் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் அதிகாரி மோனிகா ஷெர்கில் கூறுகையில், “இந்த படம் உலகளவில் முதலிடம் பிடித்தது எங்களுக்கு பெருமை. இந்தியாவில் இருந்து இன்னும் பல நல்ல கதைகள் உலகத்துக்கு செல்ல வேண்டும்,” என்றார்.
இந்த வெற்றி குறித்து நடிகை பிரியங்கா மோகன் மகிழ்ச்சியுடன் கூறினார். “இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. செண்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
இயக்குநர் கார்த்திக் கூறுகையில், “இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது,” என்றார்.
மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ படம் தனது உணர்வுப்பூர்வமான கதையால் உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இது போன்ற தமிழ் கதைகள் உலக அளவில் செல்வதை இந்த படம் மீண்டும் நிரூபித்துள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













