சற்று முன்

நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |   

சினிமா செய்திகள்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா
Updated on : 01 October 2024

தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நோயறிதல் மையங்களில் ஒன்றான ஹைடெக் நோயாறிதல் மையங்கள் (Hiteck Labs) நிறுவனர் மற்றும் முன்னாள் மருத்துவ இயக்குநரான டாக்டர்.எஸ்.பிகணேசன், 2021 ஆம் ஆண்டு தனது ஹைடெக் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியவர் தற்போது மருத்துவ துறையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.



 



இரத்த குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் இரத்த புற்றுநோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பிரத்யேக அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனையை டாக்டர்.எஸ்.பி.கணேசன் சென்னையில் ஆரம்பித்துள்ளார். 



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ என்ற பெயரில் சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (பச்சையப்பன் கல்லூரி அருகே} தொடங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையின் திறப்பு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது.



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.விஹண்டே மற்றும் பத்மஸ்ரீ டாக்டர்.மேமன் சாண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.



 



மருத்துவமனையின் நிறுவனர்கள் டாக்டர்.செந்தில் கணேசன், வரவேற்புரை ஆற்றினார். டாக்டர்.எஸ்.பி.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.



 



டாக்டர் எம்.என்.சதாசிவம் ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யின் நோக்கம் மற்றும் அதிநவீன மருத்துவம் பற்றி விளக்கமளித்தார். 



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ பற்றி பேசிய டாக்டர்.எஸ்.பி.கணேசன், “ஹைடெக் லேப்ஸ் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவத்திடம் ஒப்படைத்த பிறகு மருத்துவ துறையில் புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன். அதன்படி, இரத்த கோளாறுகள் மற்றும் குறிப்பாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதோடு, நோய் ஆரம்பத்திலேயே கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய மருத்துவமனையை தொடங்க முடிவு செய்து ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யை நிறுவியுள்ளோம்.



 



எங்கள் மருத்துவமனையில் திறமையான மூத்த மருத்துவர்கள் மட்டும் இன்றி, திறமையான செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமித்துள்ளோம். இரத்தம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான குறைபாடுகளையும் குறிப்பாக இரத்த புற்றுநோய்களை துள்ளியமாக கண்டறிந்து சிறந்த முறையில், குறைந்த கண்டனத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், நன்றி.” என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா