சற்று முன்

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா
Updated on : 01 October 2024

தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நோயறிதல் மையங்களில் ஒன்றான ஹைடெக் நோயாறிதல் மையங்கள் (Hiteck Labs) நிறுவனர் மற்றும் முன்னாள் மருத்துவ இயக்குநரான டாக்டர்.எஸ்.பிகணேசன், 2021 ஆம் ஆண்டு தனது ஹைடெக் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியவர் தற்போது மருத்துவ துறையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.



 



இரத்த குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் இரத்த புற்றுநோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பிரத்யேக அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனையை டாக்டர்.எஸ்.பி.கணேசன் சென்னையில் ஆரம்பித்துள்ளார். 



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ என்ற பெயரில் சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (பச்சையப்பன் கல்லூரி அருகே} தொடங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையின் திறப்பு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது.



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.விஹண்டே மற்றும் பத்மஸ்ரீ டாக்டர்.மேமன் சாண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.



 



மருத்துவமனையின் நிறுவனர்கள் டாக்டர்.செந்தில் கணேசன், வரவேற்புரை ஆற்றினார். டாக்டர்.எஸ்.பி.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.



 



டாக்டர் எம்.என்.சதாசிவம் ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யின் நோக்கம் மற்றும் அதிநவீன மருத்துவம் பற்றி விளக்கமளித்தார். 



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ பற்றி பேசிய டாக்டர்.எஸ்.பி.கணேசன், “ஹைடெக் லேப்ஸ் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவத்திடம் ஒப்படைத்த பிறகு மருத்துவ துறையில் புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன். அதன்படி, இரத்த கோளாறுகள் மற்றும் குறிப்பாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதோடு, நோய் ஆரம்பத்திலேயே கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய மருத்துவமனையை தொடங்க முடிவு செய்து ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யை நிறுவியுள்ளோம்.



 



எங்கள் மருத்துவமனையில் திறமையான மூத்த மருத்துவர்கள் மட்டும் இன்றி, திறமையான செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமித்துள்ளோம். இரத்தம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான குறைபாடுகளையும் குறிப்பாக இரத்த புற்றுநோய்களை துள்ளியமாக கண்டறிந்து சிறந்த முறையில், குறைந்த கண்டனத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், நன்றி.” என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா