சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!
Updated on : 10 December 2024

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள்  கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது. 



 



ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…



இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…



மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக வேலை பார்த்துத் தந்ததற்கு நன்றி. எடிட்டர் வசந்த் பார்க்க சின்னப்பையன் போல இருப்பார், ஆனால் அருமையாக வேலை பார்த்துள்ளார். ஷேன் நிகாம், நிஹாரிகா இருவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர், இருவருக்கும் நன்றிகள். தயாரிப்பாளர் ஜகதீஸ் என் மீது நம்பிக்கை வைத்து முழுதாக கதை கேட்காமல்  தயாரித்தார் அவருக்கு நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.



 



டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பேசியதாவது… 



மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் கோரியோகிராஃபராக என் வேலை கேமராவுக்கு பின்னால் முடிந்து விடும். பல வருடங்களுக்குப் பிறகு, கோரியோகிராஃபராக மேடை ஏறியுள்ளேன். மெட்ராஸ்காரன்  படக்குழுவிற்கு நன்றி. காதல் சடுகுடு பாடல் இனிமையான அனுபவம். இந்தப் பாடலுக்கு  கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்த பாடலை ரீமேக் செய்ய வேண்டும் என சொன்ன போது, மகிழ்ச்சியாக இருந்தது. ஷேன் நிகாம் ரசிகன் நான், மனிதர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என வியந்திருக்கிறேன். அவர் இந்தப்பாடலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நிஹாரிகாவும் மிக அருமையாக ஒத்துழைத்தார். என்னிடம் இருந்த ஐடியாவை பிரசன்னா மிக அட்டகாசமாக எடுத்து தந்தார். பாடல் பார்த்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். இயக்குநர் மிகவும் ஆதரவாக இருந்தார். தயாரிப்பாளர் ஜகதீஸ் பட்ஜெட்டை மீறி இப்பாடலுக்காகச் செலவு செய்தார். பிருந்தா மாஸ்டர், மணிரத்னம் சார் என ஜாம்பவான்கள் செய்த பாடல், அவர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்த பாடல் செய்துள்ளோம். எனக்குப் பெரிய சம்பளம் தந்துள்ளார் தயாரிப்பாளர். இந்தப்படத்தை மிகவும் நம்புகிறார். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றிகள். 



 



நடிகர் கலையரசன் பேசியதாவது… 



இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் எல்லாப்படத்திலும் உண்மையாக அர்ப்பணிப்போடு உழைப்போம், ரசிகர்கள் தரும் ஆதரவு  தான் நாம்  நடிகர்களாக வெற்றி பெறுகிறோம். தயாரிப்பாளர் ஜகதீஸ் நல்ல மனசுக்காரர், அவருக்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். ஷேன் டார்லிங், நிஹாரிகா சூப்பராக நடித்துள்ளனர். ஐஸு இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் செய்துள்ளார். டைரக்டர் வாலிக்கு நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் சின்சியராக உழைத்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி. 



 



நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…



SR PRODUCTIONS  என்னுடைய புரடக்சன் மாதிரி தான். இந்த புரடக்சன் ஆரம்பித்த நாட்களிலிருந்து உடன் இருந்துள்ளேன். ஜகதீஸ் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவரது மனதுக்கு இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன்.  நான் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க, வாலி ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளார். ஷேன் நிகாம் அவருக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிஹாரிகாவுக்கு வாழ்த்துக்கள். வாலி மிகப்பெரிய டைரக்டராக வர வாழ்த்துக்கள். அலைபாயுதே என் ஃபேவரைட் ஃபிலிம், இந்தப்பாடலைத் தந்த மணிரத்னம் சார், ஏ ஆர் ரஹ்மான் சார், சரிகமாவிற்கு நன்றி. இந்தப்பாடல் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. 



 



நடிகை நிஹாரிகா பேசியதாவது...



எல்லோருக்கும் நன்றி. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எனது கனவு நனவாகியிருக்கிறது. மணி சார் மாதிரி ஜாம்பவான் செய்த பாடல் எங்களுக்குக் கிடைத்தது வரம். என்னை ஆட வைத்த சதீஷுக்கு நன்றி. பாடல் அழகாக வரக் காரணம் ஜகதீஸ் சார் தான் அவருக்கு நன்றி. வாலி சார் இந்தப்படத்தை என்னை நம்பி தந்ததற்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் பாடல் பார்த்து பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.  விரைவில் படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி. 



 



நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது...



தயாரிப்பாளர் ஜகதீஸுக்கு நன்றி. மலையாளத்தில் நிறையத் தயாரிப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் யாரும் இவர் அளவு ஒத்துழைப்பு தந்ததில்லை நன்றி. சதீஷ் , என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி. 



 



தயாரிப்பாளர் B.ஜகதீஸ்  பேசியதாவது…



என் தாய் தந்தைக்கு முதல் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களுக்கு இந்த பாடலைத் தந்த ஏ ஆர் ரஹ்மான் சார், மணிரத்னம் சார், சரிகமா நிறுவனத்திற்கு நன்றி.  இந்தப்பாடலுக்கு யாரை டான்ஸ் மாஸ்டராக போடலாம் என்ற போது சதீஷ் தவிர யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை.  அவர் பாடல் கேட்டு விட்டு  இந்தப்பாடல் பயங்கர ஹிட்டாகும் நானே செய்கிறேன் என்றார். நான் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகச் செய்தார், ஆனால் அவர் செய்த விஷுவல் பார்த்த போது  ஏன் இந்த பட்ஜெட் வந்தது எனத் தெரிந்தது. பிரசன்னா அவரும் அருமையான விஷுவல் தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஷேன் நிகாம் தயாரிப்பாளரிடம் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆக்டர் இருப்பாரா எனத் தெரியவில்லை, நான் எப்போது கொஞ்சம் சோகமாக இருந்தாலும் உடனே உற்சாகப்படுத்துவார். இந்தப்படம் வந்த பிறகு தமிழில் மிக முக்கியமான நடிகராக இருப்பார். கலை பிரதர் உரிமையாகப் பழகுவார்.  மெட்ராஸ் அன்பு மாதிரிதான் நிஜத்திலும்,  நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறார். இப்படத்தில்  துரை சிங்கமாகக் கலக்குவார்.  நிஹாரிகா மேடம் பெரிய புரடியூசர் ஆகிவிட்டார். மிகவும் அன்பானவர். இந்தளவு டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா மிகச்சிறந்த நண்பர், நான் வெற்றி பெற வேண்டுமென மனதார நினைப்பவர். எனக்கா நிறைய உழைத்துள்ளார். வாலி மோகன் தாஸ் கதை சொன்ன போதே பிடித்தது. மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். இந்தப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். பல தடைகளைக் கடந்து தான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். இதே மவுண்ட் ரோட்டில் டீ வித்திருக்கிறேன். இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளேன். கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.   



 



மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன் முதன்மைப் பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். 



 



ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.



 



பெரும் பொருட்செலவில்,  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா