சற்று முன்

இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

பஞ்சு அருணாசலம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
Updated on : 11 August 2016

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை கண்ணம்மாப்பேட்டை மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.



 



இந்நிலையில், பஞ்சு அருணாசலம் அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்த்திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி தன் ஆளுமையால் பலவேறு படைப்புகளையும், பல கலைஞர்களையும் உருவாக்கியவர் பஞ்சு அருணாச்சலம்.அந்த சாதனை மனிதரின் திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



 



1958 -​ல் காரைக்குடி, கூடல்பட்டியிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர் பஞ்சு அவர்கள். தன்னுடைய உறவினரான கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் பாடல் எழுத உதவியாளராக சேர்ந்து, ​பாடல் எழுதும் நுட்பத்தையும் கதை, திரைக்கதை வசனம் எழுதும் நுட்பத்தையும் திறம்படக் கற்றுக்கொண்டார்.



 



தன்னுடைய முதல் பாடலான 'சாரதா' படத்தில் ‘மணமகளே மருமகளே வா வா.’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்போதும் திருமண வீடுகளில் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதே போல 400-க்கும் அதிகமான ​பாடல்களை தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.



 



குறிப்பாக 'கலங்கரை விளக்கம்' படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு எழுதிய "பொன்னெழில் பூத்தது புது வானில்", ரஜினி நடித்த 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தில் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ", 'கல்யாண ராமன்' படத்தில் ”மலர்களில் ஆடும் இளமை புதுமையே" போன்ற பாடல்கள் மனதை வ்ட்டு இன்றும்,என்றும் ​நீங்காத பாடல்கள் தான். ​



 



கதை,திரைக்கதை, வசனம்,பாடல்,இயக்கம்,பட வினியோகம்,தயாரிப்பு என்று சினிமாவில் எல்லா துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்த பஞ்சு அவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.



 



அதோடு இசைஞானி இளையராஜாவை ’அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகம் செய்த ​​மாபெரும் மனிதர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்தவர். இத்தகையை பெருமைகளை உடைய பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும்,​ அவரை பிரிந்து வாடும் அவரது​ குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா