சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

சினிமா செய்திகள்

கேரளாவில் நிவாரண பொருட்களை வழங்கிவரும் அபிசரவணன்
Updated on : 15 August 2018

தற்போது கேரளா முழுதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன.



அந்தவகையில் 'கேரளா நாட்டிளம் பெண்களுடனே' புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.. மக்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, மக்களை பாதிக்கும் பேரிடர் சமயமாக இருந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக காலத்தில் இறங்கி தனது பங்களிப்பை தரக்கூடியவர் தான் அபிசரவணன்..



நிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசிராவணன்..



வயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன். அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர், 



இதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது. உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .



இந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த்  மற்றும்  ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா