சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

சினிமா செய்திகள்

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் போட்டி
Updated on : 10 December 2018

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெறும்  வகையில் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாபெரும் மாரத்தான் சென்னையில் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள உடல் ஆரோக்கியம் மற்றும் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி மையம் மூலமாக RCC அறக்கட்டளை ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்க உள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியில் முதல்கட்டமாக 500 பேர் பயனடைய இருக்கிறார்கள்.



500 இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான மாரத்தான் போட்டியில்  5000 பேர் பங்கேற்று ஓடினர். பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டிக்காக திட்ட இயக்குனர் மிதேஷ் பண்டாரி, தலைவர் மகேந்திர சங்வி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பிக் லாண்டரி திரு குமரகுரு, ஜெயின் பஜார் திரு நீலேஷ் லோதா இருவரும் மாரத்தான் போட்டிக்காக பங்களிப்பு செய்திருக்கிறார்கள். 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 1.5 கிலோ மீட்டர் தூரம்  என்று 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. 1.5 கிலோ மீட்டர் தூரத்திலான போட்டியில் 1000 குழந்தைகள் பெற்றோர்களோடு பங்கேற்று ஓடினர். 



இந்த போட்டியில் ரயில்வே பாதுகாப்புப்  படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இருந்து பங்கேற்ற 1000 மாணவிகளின் ஓட்டத்தை அந்த கல்லுரித் தலைவர் வி.எம்.முரளிதரன் துவக்கி வைத்தார்.



மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னை பெசன்ட் நகர் தொடங்கி போட்டி நடைபெறும் சாலைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.



பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெற உதவ  முன்வருவோர்www.magnathon.com என்ற வலைத்தளத்துக்கு சென்று பங்களிப்புச் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு rccmagnum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா