சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

கிருஷ்ணன்-பஞ்சு ஆவணப்பட வெளியீட்டில் சூர்யா பகிர்ந்த நினைவலைகள்!
Updated on : 07 April 2017

சிவாஜிகணேசன், S.S.ராஜேந்திரன் போன்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி, பல்வேறு சிறந்த திரைப்படங்களை வழங்கிய கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் ஆவணப்படம் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.



 



இந்திய சினிமாவின் முன்னோடிகளான கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெற்றிகரமாக படங்களை கொடுத்திருக்கிறார்கள். இரட்டையர் என்று சொல்லப்படும் இவர்களில், கிருஷ்ணன் திரைக்கதை மற்றும் வசனங்களையும், பஞ்சு படத்தயாரிப்பு மற்றும் எடிட்டிங்கையும் கவனித்துக் கொண்டனர்.



 



இந்த இருவரும் இணைந்து இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் 40 ஆண்டுகளாக 56 படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையிலுமே ஒன்றாக இணைந்தே பணிபுரிந்தனர்.



 



இவர்கள் குறித்த ஆவணப்பட வெளியீட்டில் பேசிய நடிகர் சூர்யா, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.



 



இந்த நிகழ்ச்சியில் மேலும் உரையாற்றிய சூர்யா, "உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன்" என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.



 



மேலும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று சூர்யா கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா