சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து!
Updated on : 08 April 2017

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.



 



12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்திக்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதன்போது ரசிகர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



 



ஆனால் மாவட்ட வாரியாக சுமார் 10,௦௦௦ ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.



 



இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரசிகர்கள் இரண்டு இரண்டு பேராக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இரண்டு பேர் உள்ள புகைப்படத்தை எப்படி வீட்டுச்சுவற்றில் மாட்டுவது என்று வருத்தப்பட்டார்கள். அதேசமயம் ஒரே சமயத்தில் எல்லா மாவட்ட ரசிகர்களும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பல சிரமங்களைத் தருவதாக உள்ளது.



 



எனவே வருங்காலத்தில் ஒவ்வொரு மாவட்ட அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை அழைத்து தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துகொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா