சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

பாடலாசிரியர் பா.மீனாட்சிசுந்தரம்
Updated on : 24 February 2015


இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜயிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர்.

தற்போது, ராட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கச்சாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் எட்டுத் திக்கும் மதயானை திரைப்படத்தில் “நெல்லைச் சீமை இது நெல்வேலி பூமி இது” என்று திருநெல்வேலியின் பெருமைகளைச் சொல்லும் பாடலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்லை வட்டர வழக்கிலேயே எழுதப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இவர், காட்டுமல்லி, லொடுக்குபாண்டி மெய்மறந்தேன், தாட்டியன், கொட்டாங்குச்சி, யாவும் காதலே, கலைவாணர் நாடக மன்றம், காத்து, தம்பி வீரபாண்டியன் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் ‘தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி’ எனும் காதல் கவிதை தொகுப்பும், ‘பட்டாம்பூச்சி வாசம்’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளியீட்டுள்ளார். விரைவில் முத்தங்கள் சார்ந்த “மையல் நேரத்துத் தேநீர்” எனும் கவிதைத் தொகுதியை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா