சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா தத்தா செய்தது சரியா தவறா?
Updated on : 01 April 2016

ஆறாது சினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனும் படத்தில் நடித்து வந்தார்.



 





படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் கடைசி ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்துள்ளது. இதில் முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நடிக்க வேண்டும்.



 





மற்ற நடிகர்கள், பெரிய தொழிற்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் கடைசி நாள் படப்பிடிப்புக்கு வருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இறுதிவரை படப்பிடிப்புக்கு வராமல் போனார் ஐஸ்வர்யா தத்தா. அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்னர், நாயகி வராததால் படப்பிடிப்பு ரத்தானது.  இதனால் தயாரிப்பாளருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 





இந்நிலையில் சுந்தரப்பாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் படத்தில் நடிப்பதற்காகவே ஐஸ்வர்யா தத்தா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



பாதிக்கப்பட்ட படக்குழுவினரிடமிருந்து மட்டுமே இந்த செய்தி வந்ததால் இதற்கு ஐஸ்வர்யா தத்தாவின் விளக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதன் பின்னர்தான் அவர் செய்தது சரியா, தவறா என்று கூறமுடியும் என்றாலும் தயாரிப்பாளருக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா