சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

“என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்
Updated on : 26 March 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் பி. அஜித் குமார் இணைந்து உருவாக்கியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர், ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் மார்ச் 27 முதல் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னை நகரில் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.



 



10 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸ், வித்தியாசமான கதைக்களத்தால் ஏற்கனவே கவனம் ஈர்த்துள்ளது. கதையின் முதல் அத்தியாயம் நாயகனின் வெட்டப்பட்ட தலையிலிருந்து தொடங்குவது போன்ற புதுமையான முயற்சி இதில் இடம்பெற்றுள்ளது.



 



இந்த தொடரில் விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், சிங்கம் புலி, வி.ஜே. பார்வதி, ரிஷா ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார்.



 



இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.



 



இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.



 



விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி.  நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் '' என்றார்.



 



ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், '' இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.



 



பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.



 



இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.



 



தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.



 



அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் '' என்றார்.



 



இயக்குநர் - படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், '' விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல்  ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள்.  ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.



 



இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும்  திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.



 



இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.



 



நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், '' இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



 



என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.



 



ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், '' விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த' 96 'படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  



 



இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind)  என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.



 



'கடைசி விவசாயி' படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்'' என்றார்.



 



ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், '' திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்'' என்றார்.



 



இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், '' இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்'' என்றார்.



 



கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், '' இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி  செய்வேன்.



 



இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.



 



நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.



 



இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌



 



இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்'' என்றார்.



 



நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், '' இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.  இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்'' என்றார்.



 



நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், '' இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை.  அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன்.  விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்'' என்றார்.



 



நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், '' கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும் இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி'' என்றார்.



 



நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.



 



நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மி

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா