சற்று முன்

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |   

சினிமா செய்திகள்

நீலகிரி மாவட்ட பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி
Updated on : 10 February 2019

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும்  அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து  செயல்பட உள்ளார்   ஆரி. 



 நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின்  கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சாந்தி எடுத்த பழங்குடியினர் பற்றிய  டாக்குமெண்டரி பார்த்து,அவரது வேண்டுகோளை ஏற்று   பங்கு பெற்றேன் இந்த கூட்டத்தில் நீலகிரி   மாவட்ட ஆட்சியர் மற்றும் நாவா தொண்டு நிறுவனத்தின் செயலாளர்  ஆல்வாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். 



விழாவில் முன்னதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆல்வாஸ் பேசியபோது  நாவா தொண்டு  நிறுவனங்கள் இந்த பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசுடன் செயலாற்றுவதில் மகழ்ச்சி அளிப்பதாகவும் தற்போது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையும் எங்களோடு கை கோர்ப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக  பேசினார். 



 இவர்களோடு இணைந்து 



பழங்குடியினர்  உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அந்தந்த பழங்குடி இன தலைவர்களோடு பேசி  முன்னேற்பாடுகள் செய்து வருகிறோம் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் 



மேலும் அழிந்துவரும் இவர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றவும் பணியாற்ற உள்ளதாகவும் அவர்களது வாழ்வியலை பற்றி தான் மட்டுமல்ல எனது குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள என் மனைவி மற்றும் குழந்தையோடு ஒருவாரம் தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டோம் என  தெரிவித்தார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா