சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி - நாளை அரையிறுதி போட்டி
Updated on : 20 February 2019

இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியில் பங்குபெறும் ஆறு அணிகளில் ஒரு அணியாக சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி திகழ்கிறது. கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும்,  ஸ்ரீ  ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் இந்த அணியின் இணை உரிமையாளராக இருக்கிறது. 



 



 ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. இதில் சென்னையில் சார்பாக சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி விளையாடுகிறது.



 



சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களை கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவில் இடம்பெற வைத்திருக்கிறது. இந்த அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலுக்கு இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருக்கிறார். இந்த அணிக்கான வீடியோ புரோமோ பாடலை ‘கீ ’படத்தின் இயக்குனரான காலிஸ் இயக்கியிருக்கிறார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.இந்நிலையில் தற்பொழுது அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியை உள்ளூர் ரசிகர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.



 



சென்னை அணி எப்படி அரையிறுதி போட்டி வரை முன்னேறி வந்தது குறித்து விரிவாகக் காண்போம்.



 



சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, தன்னுடைய முதல் சுற்று 3 லீக் போட்டிகளை கொச்சியில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாடியது. முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் என்ற அணியுடனும், இரண்டாவதாக ஹைதராபாத்தை சேர்ந்த ப்ளாக்ஹாக்ஸ் என்ற அணியுடனும்,  பிறகு இறுதியாக கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் என்ற  அணியுடனும் மோதியது.  இதில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி,  ஹைதராபாத் ப்ளாக்ஹாக்ஸ் என்ற அணியுடன் விளையாடி, நான்குக்கு ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.  காலிகட் ஹீரோஸ் அணியுடன் 4 க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கிலும், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் இரண்டு மூன்று என்ற செட்களிலும் தோல்வியைக் கண்டது.



 



சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இரண்டாவது சுற்று லீக் போட்டிகளில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி,  யு மும்பா வாலி என்ற அணியை சந்தித்தது.  வலிமையான அந்த அணியுடன் மோதும் போது உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் முதல் செட்டை வென்றது. இருந்தாலும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று செட்டுகளில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த ஆட்டம் இரண்டு மூன்று என்று செட் அளவில் சென்னை அணி தோல்வி கண்டது. அடுத்த நடைபெறும் லீக் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவானது. இதில் சென்னை அணி அகமதாபாத் டிபென்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் சென்னை அணி 4 க்கு 1 என்ற செட் அளவில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 



 



சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், சென்னைஸ்பார்ட்டன்ஸ் அணி நாளை நடைபெறும் அரை இறுதிப்போட்டியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் கொச்சி அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெறுமா..? என்பது கைப்பந்து விளையாட்டு ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.



 



இந்த போட்டியை பற்றிய கூடுதல் விபரங்களையும் டிக்கெட், அப்டேட்ஸ்,. ஸ்கோர், ஜெஸ்ஸி போன்ற விவரங்களை அறிந்து கொள்ள www.chennaispartans.co.in  என்ற இணையதள முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா