சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

16 தெய்வீக திருகல்யாணம் விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த விழா
Updated on : 21 February 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இப்பீடத்தில் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், விவசாயம், வியாபார பெருமக்கள் நலனுக்காகவும், குடும்பங்களில் திருமணம், மக்கட்பேறு, கிரக பிரவேசம் போன்ற வைபவங்கள் தடையில்லாமல் நடைபெற வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும் எங்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கிடைக்க வேண்டியும், குலதெய்வம், குடும்ப தெய்வம் அருளுடன் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற வேண்டி தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு உலகில் எங்கும் நடைபெறாத வகையில் வரும் பங்குனி மாதம் 03 ஆம் தேதி (17.03.2019) 16 தெய்வீக திருகல்யாணத்துடன் 1000 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா நடைபெறுகிறது.



 



 



இதனை முன்னிட்டு வருகிற மாசி மாதம் 10 ஆம் தேதி 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00மணிக்குள்ளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பந்தக்கால் முஹூர்த்த விழா நடைபெற உள்ளது.



 



 



ஆரோக்ய ஸ்தலமான ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பலவிதமான வைபவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு உலக நலன் கருதி 16 தெய்வீக திருகல்யாணம் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 17.03.2019ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.



 



 



மேற்கண்ட வைபவம் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 17-ஆம் தேதி வரை, அதாவது மாசி மாதம் 29 ஆம் தேதி முதல் பங்குனி மாதம் 03 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



 



 



இதனை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளைத் தொடங்குவதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பந்தக்கால் நடும் விழா யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00மணிக்குள்ளாக பந்தக்கால் முஹூர்த்ததிற்கான சிறப்புப் பூஜைகள், யாகங்களுடன், மகா தீபாராதனை நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹாதன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரிபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.



 



இந்நிகழ்ச்சியில் தன்வந்திரி குடும்பத்தினர்கள், கலவைதவத்திரு. சச்சிதானந்த ஸ்வாமிகள், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ காமாக்ஷி ஸ்வாமிகள், குடியாத்தம்கும்மாத்தம்மா, கொடுமுடி ஆட்சி பீடம் ராணி அம்மா, காஞ்சீபுரம் லலிதாம்பிகை பீடம் ஸ்வாமிகள், பூந்தமல்லி அன்னபாபா ஆலயநிறுவினர் திருமதி. ஸ்ரீமதி, சென்னை ராமாவரம் செந்தமிழ் நகர் வைத்தியநாத பாபா ஆலய நிர்வாகி திரு. தயாளன் மற்றும் நகர –கிராம நிர்வாகிகள், தொழிலதிபர்கள், மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை விழா குழுவினர் தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா