சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

திருநங்கைகள் மற்றும் புர்கா அணிந்த பெண்கள் மூலம் இயங்கும் மக்கள் ஆட்டோ சேவை
Updated on : 27 February 2019

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி சேவையை துவக்கிவைத்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்தியாவின் பசுமை மனிதர் அப்துல் கனி, மக்கள் ஆட்டோ முதன்மை செயல் அலுவலர் யாஸ்மீன் ஜவஹர் அலி, மக்கள் ஆட்டோ ஆலோசகர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



 



மக்கள் ஆட்டோ சேவையில் பெண் ஓட்டுனர்கள், திருநங்கை ஓட்டுனர்கள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள், ஆண் ஓட்டுனர்கள் உள்ளனர்.  தேவையான ஓட்டுனர்களை தேர்வு செய்து சவாரி செய்யும் வசதியை மக்கள் ஆட்டோ வழங்குகிறது.



 



எஸ்.எம்.எஸ். மூலம் OTP பெற்று ஆட்டோவில் பயணிக்கலாம்.



 



மொபைல் ஆப் மூலமாகவும் புக்கிங் செய்யலாம். நேரடியாக கால் செண்டருக்கு 044 - 43214321 என்ற எண்ணுக்கு போன் செய்தும் பயணிக்கலாம்.



 



M ஆட்டோ ஆப்பில் அவசரகால உதவிக்கு தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, அலுவலகம் செல்வோர், பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. முழுமையான பாதுகாப்பான பயணத்தை M ஆட்டோவில் பெண்கள் உணரமுடியும். பிளே ஸ்டோரில் இருந்து M Auto App டவுன்லோட் செய்துகொள்ளலாம்.



 



அரசு நிர்ணயித்த மீட்டர் 



 



கட்டணம் மட்டுமே மக்கள் ஆட்டோவில் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.



 



சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் மக்கள் ஆட்டோ சேவை வழங்கப்படுகிறது.



 



தமிழகம் முழுவதும் 50 லட்சம் பயணிகள் மக்கள் ஆட்டோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் மக்களுக்கான சேவையை மக்கள் ஆட்டோ விரிவுபடுத்தி உள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா