சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

ஆந்திர ஆளுநரிடம் நூலை பெற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா
Updated on : 02 March 2019

14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் (SPARRC INSTITUTE), நாடு முழுவதும்  விளையாட்டு மற்றும் ஆரோக்கிய மருத்துவ மையங்களைக் கொண்டுள்ளது. 14 மையங்களோடு பரந்து விரிந்துள்ள ஸ்பார்க் இன்ஸ்டிடியூட்டின் 14வது ஆண்டுவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் ஆண்டுவிழாவில் அதன் நிறுவனர் டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய `ஃபிட்னெஸ் ஸென்ஸ்’ மற்றும் ஃபிட்டோஃபீடியா நூல்கள் வெளியிடப்பட்டன.



 



உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்துவமானது என்று கூறும் நூலாசிரியர், "ஃபிட்னஸ், விளையாட்டு பற்றி எளிய முறையில் விளக்கும் 'ஃபிட்னஸ் ஸென்ஸ்' நூலில், விளையாட்டு வீரர்கள், யோகா, தற்காப்புக் கலைகள் பற்றி தெளிவாக  விளக்கி உள்ளதாக" கூறியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவும் ஃபிட்னஸ் ஸென்ஸ்  புத்தகம் எல்லோர் வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்" என்று டாக்டர் கண்ணன் புகழேந்தி தெரிவித்துள்ளார்.  



 



விளையாட்டு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகாலம்  அனுபவம் கொண்ட டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய நூலை, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் மேதகு திருமிகு ESL.நரசிம்மன் வெளியிட்டார். நூலை திரைப்பட நடிகர் ஆர்யா  பெற்றுக்கொண்டார். 



 



நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, டாக்டர் கண்ணன் புகழேந்தியை சந்திப்பதற்குமுன் சதைப்பிடிப்பு பற்றி எந்த அறிவும் தமக்கு இல்லை என்று கூறினார்.அதைத் தீர்த்து வைக்கக்கூடிய அளவில் ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம் அமைந்து இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.



 



ஆந்திர ஆளுநர் தமிழில் பேச்சு



 



நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநர் ESL.நரசிம்மன், பேசும்போது, "நம்முடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த புத்தகங்களை அவசியம் படிக்கவேண்டும்" என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, "புதிரான துறையை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளியமுறையில் டாக்டர் கண்ணன் புகழேந்தி விளக்கி இருப்பதாக" தெரிவித்தார்.



 



மூத்த விளையாட்டு மருத்துவரான கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு  சந்தேகங்களுக்கு அளித்துள்ள  பதில்கள்தான்  ஃபிட்டோபீடியா நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. "ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையாக இந்த நூல் தீர்வு சொல்வதாக" கூறுகிறார் நூலாசிரியர் டாக்டர் கண்ணன் புகழேந்தி. நிகழ்ச்சியை டி.வி. தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார். விழாவில் திருமதி ஆளுநர் விமலா நரசிம்மன், நல்லிகுப்புசாமி செட்டியார், பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலி, டாக்டர் கண்ணன் புகழேந்தியின் பெற்றோர்  ரமணி மற்றும் கண்ணன், தென் திருப்பதி ஆலயத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



 



விழாவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய அளவிலான 100 மீட்டர் 200 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ஷிவானி, தேசிய அளவிலான 400 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாஸ்டர் கே.ஆர். அரவிந்த் ஆகாஷ் இருவரும் விருது பெற்றனர். பயிற்சியாளர் டாக்டர் நடராஜன், 200 மீட்டர் தடகளப் போட்டியில் சாதனைப் படைத்தவர். கடந்த ஆண்டு  இந்தியாவின் பெருமை விருதை ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐ.ஐ.எஸ்.எம்.-ல் இருந்து பெற்றவர். தன்னுடைய நூலுக்காக சர்வதேச விருது பெற்ற திருமதி சபிதா ராதாகிருஷ்ணனுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



 





 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா