சற்று முன்

சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |   

சினிமா செய்திகள்

சாதிக்காக தெய்வத்தையே கொல்ல நினைக்கும் கிராமம்
Updated on : 29 July 2019

ஆதி திரைக்களம் தயாரிப்பில், களஞ்சியம் இயக்கத்தில் சீமான் நடித்திருக்கும் படம் முந்திரிக்காடு. 



 



 



இந்த படத்தில் செந்தமிழன் சீமான், புகழ், சுபப்பிரியா, ”தியேட்டர்லேப்” ஜெயராவ், கலைசேகரன், அ.வெ.பார்த்திபன், சக்திவேல், சோமு மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



 



 எழுத்து  இயக்கம் மு. களஞ்சியம், இசை ஏ.கே. பிரியன், ஒளிப்பதிவு ஜி.ஏ. சிவசுந்தர், படதொகுப்பு எல்.வி.கே.தாசன்.



 



 





தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் தட்டாங்காடு என்கிற கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பம்,அந்த சரகத்தில் பணிபுரிந்த காவல்துறை ஆய்வாளர் அன்பரசனை (செந்தமிழன் சீமான் ) மன ரீதியாக கடுமையாக பாதிக்கிறது. அதாவது அந்த ஊரை சேர்ந்த ஒரு ஆதிக்க சாதி ஆணும், தாழ்த்தப்பட்ட பெண்ணும் காதலிக்கின்றனர். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை, உள்ளூர் சாதி வெறியர்கள் ஒன்பது பேர் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர்.வலுவான சாதிய அரசியல் பின்னணி இருப்பதால் கொலையாளி களை சட்டம் எதுவும் செய்ய இயலாமல் தலைகவிழ்ந்து நிற்கிறது.ஆனால், சட்டப்படி அவர்களை எப்படியாவது தண்டித்து விட வேண்டும் என்று அன்பரசன் கடுமையாக போராடிக்கொண்டு இருக்கும் போது, அடுத்து அதே ஊரில் இன்னொரு காதல் உருவாவது கண்டு அதிர்ச்சியடைகிறார்.



 



 



தட்டாங்காடு கிராமத்தில் வாழுகிற முருகன் (''தியேட்டர் லேப்'' ஜெயராவ் ) ஒரு ஏழை முந்திரி விவசாயி. அவரது மூத்த மகள் தெய்வம் ( சுபப்பிரியா) தன் மகள் தெய்வத்தை எப்படியாவது கலெக்டருக்கு படிக்க வைத்து விடவேண்டும் என்பது முருகனின் கனவு. ஆனால் விதி சும்மா விடுமா? தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லமுத்துவை (புகழ்) தெய்வம் காதலிக்கிறாள்.



 



 



அந்தக் காதல் மெல்ல மெல்ல ஊருக்குள் கசிகிறது. தெய்வத்தின் சாதியினர் காதலை ஏற்க மறுக்கின்றனர். அந்த ஒன்பது கொலை வெறியர்களும் அவளையும் அவளது குடும்பத்தையும் துன்புறுத்துகிறார்கள். அந்த கிராமம் ஒன்று திரண்டு தெய்வத்தை பல வழிகளில் அடித்தும் உதைத்தும் திருத்தப் பார்க்கிறது.தெய்வம் திருந்தவில்லை. சாதிய வெறியர்கள் கிராமத்தின் நடுவில் வைத்து முடியை அறுத்து அவமானப் படுத்துகிறார்கள். ஆனாலும் தெய்வம் அத்தனை சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி, செல்லாவோடு வாழ்ந்துவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறாள். எல்லா அவமானங்களையும், எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொள்கிறாள். தன் காதலை அழிக்க நினைக்கிற சாதி வெறிக் கும்பலை எதிர்த்து,உயிரையும் பணயம் வைத்து போராடுகிறாள்.



 



 



 எனவே,இனி தெய்வம் ஒருபோதும் திருந்தவே மாட்டாள் என்கிற முடிவுக்கு வந்த கிராம மக்கள் தெய்வத்தைக் கொன்று விட தீர்மானிக்கிறார்கள். ‘பாலிடாயில்’என்கிற கொடிய விஷத்தை வாயில் ஊற்றி கொல்ல வேண்டும் என்கிற கொடுமையான திட்டத்தை முருகனிடம் முன் வைக்கிறார்கள். தனது மகளை தானே எப்படி கொல்வது?கதறித் துடிக்கிறார் முருகன்."எங்களுக்காவா இத செய்யுறம்? ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டுப் போகணுமில்ல, நம்ம சாதி மானம் போவக் கூடாதுன்னுதான்.. இத செய்ய சொல்லுறோம்..''  என்று சொல்லி முருகனை நிர்பந்திக்கிறார்கள்..



 



 





மொத்த கிராமத்தையும் பகைத்துக் கொள்ள முடியாமல், முருகன் தான் தவமிருந்து பெத்த மகளை கொல்ல ஒத்துக்கொள்கிறார்.விடிவதற்குள் கொன்று, மகளை பிணமாக ஊரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிராமம் கட்டளையிடுகிறது. அதே நேரம் காவல்துறை ஆய்வாளர் அன்பரசன், அந்த கிராமத்தின் வன்மம் ,கொலைவெறி, சாதித்திமிர், மனிதர்கள் என்கிற போர்வையில் திரியும் கொடூரர்கள் என எல்லாவற்றையும் தாண்டி, எப்படியாவது தெய்வத்தை காப்பாற்றி,செல்லமுத்துவோடு வாழவைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.



 



 



ஆனால் முருகன் தன் மகளை தானே விஷம் வைத்து கொன்று கிராமத்துக்கு தனது சுய சாதி உணர்வை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.



 



 



வென்றது யார் என்பது கதை.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா