சற்று முன்

சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |   

சினிமா செய்திகள்

கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...
Updated on : 18 September 2019

அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.



 



நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள்  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.



 



தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.

நிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச்  செயலாளராக பொறுப்பேற்று  முன்னிலை வகித்தார்.



 



மேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின்  முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.



 



தலைவராக தேடல் தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத்  தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.



 





நிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,

தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.

எம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா