சற்று முன்

சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை
Updated on : 23 February 2020

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறினார். தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டியை, அங்கிருந்து விரட்டியடிக்க, அவர் தற்போது சென்னையில் தஞ்சம் அடைந்திருப்பதோடு, இங்கேயே செட்டிலாவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.



 



வீடு, சொகுசு கார் என்று ஆடம்பரமாக சென்னையில் வசிக்கும் ஸ்ரீரெட்டி, சில படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம், அவ்வபோது தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தொடர்ந்து இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி பாலியல் புகார்கள் மற்றும் அவர்களது அந்தரங்க விஷயங்கள் பற்றி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.



 



 



அந்த வகையில், தெலுங்கு குணச்சித்திர நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் இருவரும் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருவதாக, ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த தகவலால் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சை வெடித்திருக்கும் நிலையில், இதில் சம்மந்தப்பட்ட நடிகையும், நடன இயக்குநர் ஸ்ரீரெட்டி மீது கடும் போபத்தில் இருக்கிறார்கள்.



 



மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருக்கும் நடிகை கல்யாணியும், நடன இயக்குநர் ராகேஷும், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்கள் மீது சமூக வலைதளத்தில் ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருகிறார், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள்.



 



இந்த புகாரின் பேரில் ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை கைது செய்யவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா