சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை இதுதானாம்!
Updated on : 19 May 2016

எழிலின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்".



 



இது இயக்குனர் எழில், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் c.சத்யா ஆகிய மூவருக்கும் 10-வது திரைப்படம் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி.



 



இந்நிலையில், இந்த படத்தின் கதைக்கரு குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. "கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனின் விசுவாசி , நம்பிக்கை மற்றும் அவருக்கு சகலமுமாக இருக்கிறார் டெய்லாரான முருகன். இதே நிலையில் மந்திரி பதவிக்காக ஆசைப்படும் அதே கட்சியின் வேறொரு தொகுதி எம்.எல்.ஏ-வான மருதமுத்து , ஜாக்கெட் ஜானகிராமனை தனக்கு போட்டியாகவும் அதற்காக சந்தர்ப்பம் பார்த்து அவரைத் தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார்.



 



இது ஒரு புறம் இருக்க ஊர்விட்டு ஊர் வந்து ஹோட்டல் கடை நடத்தும் ராஜாமணி , எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் முருகனுக்கு இருக்கும் செல்வாக்கை கேள்விப்பட்டு தன் மகள் அர்ச்சானாவின் போலிஸ் வேலைக்காக லஞ்சமாக ரூபாய் இருபத்தைந்து லட்சம் பணத்தை முருகனிடம் தருகிறார்.



 



பணத்தை வாங்கும் முருகன் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தன் மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று நினைக்கும் முருகன், அந்த பணத்தை உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் மந்திரியை பார்பதற்காக சென்னைக்கு கிளம்பி கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் கொடுக்க விவரம் சொல்லி கொடுக்க , அவரும் டி.ஜி.பியை நேரில் சந்தித்து வேலையை கச்சிதமாக முடிக்கிறேன் என்று சென்னைக்கு செல்கிறார்.



 



சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது ? மந்திரியையும் , டி.ஜி.பியையும் ஜாகெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா ?? அர்ச்சானவிருக்கு வேலை கிடைத்ததா... இல்லையா ?? முருகனின் காதல் என்னவாயிற்று என்பது நகைச்சுவை கலந்த மீதிக்கதை" என்று படக்குழு தெரிவித்துள்ளது.



 



மேலும், சத்யா இசையமைப்பில் உருவாகியுள்ள குத்தீட்டி என்ற படத்தின் ப்ரமோ பாடலையும் வெளியிட்டு அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா