சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ஒரு கிடாயின் கருணை மனு: வதந்தியை நம்பாதீர்கள் என்கிறார் இயக்குநர்
Updated on : 09 June 2016

"ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாகவும், சினிமா என்ற பெயரில் அதை சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்ட நிலையில் அதனை படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா மறுத்துள்ளார்.



 



ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. ஒரு ஆட்டுக்கிடாவின் வாழ்க்கையை கதையாக சொல்லும் இந்த திரைப்படத்தை சுரேஷ் சங்கையா இயக்க  விதார்த் மற்றும் புதுமுகம்  ரவீனா ரவி ஆகியோர்  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இந்த திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா, . "ஒருவேளை படத்தின் பெயர் சிலருக்கு, படம் இப்படி தான் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை புகார் கொடுக்க தூண்டி இருக்கலாம். ஆனால் இந்நாள் வரை  எந்த புகாரும் வரவில்லை என்பது தான் உண்மை.



 



இந்த படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டின்  கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி  முற்றிலும் காமெடியை மையமாக கொண்டு நாங்கள் எடுத்திருக்கும் இந்த படத்தில் எந்த ஆடும், மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை" என்று கூறியுள்ளார்.



 



அறிமுக இசையமைப்பாளர் ரகுராம் இசை அமைக்கும் இந்த திரைப்படத்திற்கு RV சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா