சற்று முன்
சினிமா செய்திகள்
அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' SUN NXT OTT தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது
Updated on : 01 February 2025
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.
இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!
SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் உள்ளன.
முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: இந்தியா - http://bit.ly/sunNXT
உலகின் பிற பகுதிகள் - http://bit.ly/ussunnxt
அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com
சமீபத்திய செய்திகள்
நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா. கார்த்திக் இயக்கத்தில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) திரைப்படம் மார்ச் 12 முதல் Netflix தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.
“நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே!” என்ற வரிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர், தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரில் இருந்து தென் கொரியாவின் சியோல் நகரம் வரை செண்பா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
Seoul நகரத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், செண்பா தனது வாழ்க்கையில் சந்திக்கும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே மையக்கருவாக உள்ளது. தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் இந்த திரைப்படம், இரு நாடுகளின் வாழ்க்கை முறைகளையும் உணர்வுகளையும் அழகாக இணைக்கிறது.
இந்தப் படத்தில் பிரியங்கா மோகனுடன், தென் கொரிய நடிகர்கள் Park Hae-jin மற்றும் No Hye-jin முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’மேட் இன் கொரியா’ மற்றும் செண்பாவின் பயணம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. உறுதியற்ற தருணங்களில் நமது வலுவான நிலைப்பாடும் சுயத்தை கண்டுபிடிப்பது பற்றிய கதை இது. ஒரு சாதாரண பெண்ணிலிருந்து தன்னம்பிக்கையுடன் பல சவால்களை எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக செண்பாவின் பரிணாமத்தை நடிப்பில் கொண்டு வந்தது நிறைவாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸூடன் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். செண்பாவின் கதை எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.
கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம், துணிச்சல், நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடிக்கும் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி ஆகியவற்றை பேசும் இந்தப் படம், உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது.
‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கனவுகளை துரத்த துணியும் அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சி பயணம் ஆக இருக்கும்.
‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா
காதலின் பல பரிமாணங்களை தனித்துவமாக சித்தரிக்கும் திரைப்படமாக ‘VOWELS – An Atlas of Love’ உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.
யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் மார்ச் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, "இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்" என்றார்.
கலை இயக்குநர் மதி, "படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி".
இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், "படத்தின் ஐந்து இயக்குநர்களுக்கும் நன்றி. எனக்கு அற்புதமான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். காதலும் உயிரும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது. அதை மையமாகக் கொண்டுதான் 'Vowels' என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் ராஜூ சாருக்கும் உத்ரா புரொடக்ஷன்ஸூக்கும், யூகி சேதுவுக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார்.
இயக்குநர் சங்கீத், "இதுதான் எனக்கு முதல் மேடை. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படத்தில் உள்ள 7 பாடல்களும் நன்றாக வந்துள்ளது. படமும் சிறப்பாக வந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்" என்றார்.
இயக்குநர் சந்தோஷ் ரவி, "அறிமுக இயக்குநர்களான எங்களுக்கு யூகி சேது சார் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".
இயக்குநர் ஹேமந்த் குமார், "தயாரிப்பாளர்கள் ராஜூ சார், ஹரி உத்ரா அவர்களுக்கும் நன்றி. சிறப்பாக ஒத்துழைத்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".
இயக்குநர் ஜெகன் ராஜேந்திரன், "தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. என் முதல் படத்தில் நடித்த ராஜ் அய்யப்பா ப்ரோவுக்கு நன்றி. கதையை உள்வாங்கிக் கொண்டு அதை திரையில் அழகாக பிரதிபலித்த அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் நன்றி. மார்ச் 13 அன்று வெளியாகும் இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும்" என்றார்.
நடிகர் ராஜ் அய்யப்பா, "படத்தின் டிரெய்லரை அனைவரும் பார்த்திருப்பீர்கள். டிரெய்லர் பிடித்திருப்பது போலவே படமும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். மொழிகள் கடந்து இந்தப் படத்தை யார் பார்த்தாலும் எமோஷனலாக கனெக்ட் செய்து கொள்ள முடியும். மார்ச் 13 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது" என்றார்.
இயக்குநர் திலிப், "யூகி சேது சார், சின்னி ஜெயந்த் சார் போன்றோருடன் பணிபுரிந்தது எங்கள் பாக்கியம். நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். படத்தில் இருக்கும் எண்டர்டெயின்மெண்ட் எல்லாம் திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்" என்றார்.
நடிகர் சின்னி ஜெயந்த், "இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதைவிட யூகி சேது நடித்திருப்பதுதான் பெரிய பலம். அடுத்து அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்".
நடிகர் யூகி சேது, "இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக்கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர் சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
விநியோகஸ்தகர் ஹரி உத்ரா, “மார்ச் 13 அன்று இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு சென்று இன்றைய ஜென் ஸீ தலைமுறை பார்க்க வேண்டும். அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே அதிகம் வருகிறது. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்க இன்று இயக்குநர்கள் குறைவு. அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாக எடுத்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்த் சார் மற்றும் யூகி சேது சார் இருவரும் இந்தப் படத்திற்கு பெரிய பலம். எல்லோரும் இந்தப் படத்தை மிஸ் பண்ணாம திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். படத்தை சரியான முறையில் புரோமோட் செய்த சுரேஷ் சந்திரா சார் மற்றும் அப்துல் நாசர் சாருக்கு நன்றி” என்றார்.
‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு
தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், பிரவீன் சரவணன் இயக்கத்தில், நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘முஸ்தபா முஸ்தபா’. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து என்னுடன் மூன்று படங்கள் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்” என்றார்.
இயக்குநர் பிரவீன், “’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் டிரெய்லருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இசையும் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படமாக எடுத்துள்ளோம். டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் படமும் நிச்சயம் பிடிக்கும். மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்”.
நடிகை மோனிகா சின்னகோட்லா, “ஜாலியான படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.
நடிகை மஹிமா, “படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறோம். கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்தால் ஜாலிதான். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு நீங்கள் வெளியே வரும்போது சிரித்துக் கொண்டேதான் வருவீர்கள். அதற்கு நாங்கள் உத்திரவாதம்”.
நடிகை மாதவி, “இதுநாள் வரை நாம் பார்த்த பல படங்களில் நகைச்சுவை அங்கங்கேதான் இருக்கும். ஆனால், இதில் படம் முழுக்க உள்ளது. இயக்குநர் பிரவீன் எங்களுக்கு சூப்பரான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நடிகர் சதீஷூடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். மார்ச் 6 ஆம் தேதி படம் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு சென்று கண்டிப்பாக பாருங்கள்”.
இசையமைப்பாளர் ஜோன்ஸ், ”’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதை ரொம்பவே எனர்ஜியாக இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் பிரவீன் மற்றும் நடிகர் சதீஷூக்கு நன்றி” என்றார்.
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனங்கள் KVN Productions மற்றும் Monster Mind Creations அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்ஃப் பகுதிகளில் நிலவும் பதற்றம் மற்றும் அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்குள்ள சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்த தயாராகி இருந்தனர். மேலும் மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் பணிகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.
படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோ வெளியீட்டையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மேலும் அடுத்த சில நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை
'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.
உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”
'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.
இந்த படத்தில் Yash, Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth மற்றும் Tara Sutaria ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Geetu Mohandas இயக்கியுள்ள இந்தப் படத்தை யாஷ் எழுதியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்துடன், “திரையரங்குகளில் சந்திப்போம்” என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டுமல்ல, தனது தனித்துவமான ரிதம் மற்றும் திரை ஆளுமையால் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியாகியதும் சமூக வலைதளங்களில் வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அந்த எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியவாறு, நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் பாடல் மொத்தமாக 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 800K-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வை சாதனையை இது முறியடித்துள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்கு அதிரடியான, மின்னல் வேக இசையை வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த பீட்ஸ் மற்றும் ஆற்றல் மிக்க இசையுடன் அவர் குரலும் இணைந்து பாடலின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. தமிழில் விவேக் மற்றும் தெலுங்கில் அனந்த ஸ்ரீராம் எழுதிய வரிகள் பாடலுக்கு வலிமையும் ஆழமும் சேர்த்துள்ளன.
இந்தப் பாடலில் ராம் சரண் முழுமையான ஸ்டைலுடன் திரையை அதிரவைக்கும் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிரடி மற்றும் ரிதம் கலந்த அவரது நடன அசைவுகள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. ஜானி மாஸ்டர் வடிவமைத்த கடினமான நடன அமைப்புகளை அவர் மிகவும் எளிதாகவும் அதிரடியாகவும் ஆடியுள்ளார்.
இயக்குநர் புச்சி பாபு சனா தனது இயல்பான கிராமத்து தன்மையையும், பிரமாண்டமான காட்சியமைப்புகளையும் இணைத்து பாடலை மேலும் வலுப்படுத்தியுள்ளார். இயற்கை மண்மணத்துடன், கண்களுக்கு கவர்ச்சியான காட்சிகளால் இந்தப் பாடல் சமூக வலைதளங்களை ஆளும் வகையில் உருவாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பிலான “பெத்தி” திரைப்படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெப் வெளியீடாக ‘ரிசார்ட்’ (Resort) எனும் புதிய சீரிஸை அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரிஸ், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 புதிய எபிசோட்களுடன் வெளியாகவுள்ளது.
பிரபல ‘எருமை சாணி’ மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான விஜய் குமார் ராஜேந்திரன் இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரை உலகில் முன்னணி இயக்குநராக அறியப்படும் பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக கைகோர்த்திருப்பது இந்த சீரிஸின் சிறப்பாகும்.
‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனைச் சொகுசு விடுதியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. முறையான கல்வி பெறாதபோதும் சமையல் கலை மீது அபார ஈர்ப்பும் திறமையும் கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்ற கனவை தன்னுள் வளர்த்துக் கொள்கிறார். அவரது லட்சியப் பயணத்திற்கும், பணியிடத்தில் நிலவும் அதிகார ஒடுக்குமுறைக்கும் இடையே உருவாகும் மோதல்களே கதையின் மையமாக அமைந்துள்ளது.
கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய எதிர்மறை கதாபாத்திரமாகவும் தலைவாசல் விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பதற்றமான சூழலை தனது மிரட்டலான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் சொகுசு விடுதியின் பின்னணியில் நிகழும் கலாட்டாக்கள் என பல்வேறு அம்சங்கள் கலந்த முழுமையான பொழுதுபோக்குத் தொடராக ‘ரிசார்ட்’ உருவாகியுள்ளது.
‘ரிசார்ட்’ வெப் சீரிஸ், மார்ச் 13 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது.
'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!
நடிகர் Suriya நடிக்கும் #சூர்யா46 திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல, குடும்ப பாசம், உறவு நெகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி பூர்வமான தருணங்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த தோற்றம், அவரது முந்தைய குடும்ப கதாபாத்திரங்களை நினைவூட்டும் வகையில் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் கலந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெம்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார். உணர்ச்சிகளை இயல்பாக காட்சிப்படுத்துவதில் தனித்துவம் கொண்ட இவர், இந்த படத்திலும் மனதை தொடும் அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாயகியாக மமிதா பைஜு இணைந்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய வண்ணம் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது. டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் கையாண்டுள்ளார்.
Sitharசிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்படுகிறது.
குடும்ப உணர்வுகள், நெகிழ்ச்சி மற்றும் வெகுஜன அம்சங்கள் இணையும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – இந்த ஜூலையில் திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!
'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்
யாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையின் தனித்துவமான பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் கலாச்சார மோதல்களை கலகலப்பாக சொல்ல வருவதாக டீசர் சுட்டிக்காட்டுகிறது.
‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். வடசென்னை மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு ஆங்கிலோ-இந்திய பெண் நுழையும் போது உருவாகும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதையின் மையமாக அமைகின்றன.
“வடசென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர், சென்னையின் ஒரு வித்தியாசமான முகத்தை நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தை சுறுசுறுப்பாக வெளிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நடிகை ரோஜா முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டைட்டில் டீசர் மூலம் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ள ‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஜாலியான என்டர்டெய்னராக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு
திரையரங்குகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட காந்தி தளக்ஸ் திரைப்படம், வரும் மார்ச் 6 முதல் ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடாக வெளியாகிறது. இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள இந்த படம், உரையாடல்கள் இல்லாமல் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லும் அரிதான மௌனத் திரைப்படமாக திகழ்கிறது.
ஜீ ஸ்டுடியோஸ், மூவிமில் மற்றும் க்யூரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை உலகின் பிரபல இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் பின்னணி இசை, படத்தின் உணர்ச்சி வலிமையை மேலும் உயர்த்துகிறது.
‘காந்தி டாக்ஸ்’ தனிப்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார சிரமங்களில் சிக்கியுள்ள சிலரின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்லுகிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் சந்திக்கும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாகவும், மனித உறவுகளின் தீவிரமான கதையாகவும் மாறுகிறது. உரையாடல்கள் இன்றி காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் மூலம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த படம், பார்வையாளர்களுக்கு மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”
அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”
இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.”
மனதை தொடும் மௌனக் கதை அனுபவிக்க, ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை மார்ச் 6 முதல் ZEE5-ல் தவறாமல் காணுங்கள்.
திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்
வேல்ஸ் யூனிவர்சிட்டியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ கலாச்சார விழா மாணவர்களின் உற்சாகக் கொண்டாட்டமாக அமைந்தது. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழாவில், மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், ‘டூரிஸ்ட் ஃபேமலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந, நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் VJ சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் உடன் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பித்தனர்.
நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன்.
எனக்கு வேல்ஸ் பல்கலைக்கழக்த்திற்கு தொடர்பு உண்டு என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்”
விழாவில் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் “ என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் வட சென்னை 2 தான் என்றே கூறலாம் அதேபோல் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என தெரிவித்தார்.
டிஜே தீபிகாவின் மிரட்டலான இசை நிகழ்ச்சி விழாவிற்கு கூடுதல் உற்சாகத்தையும் ஆற்றலையும் வழங்கியது. மாணவர்கள் உற்சாகக் குரல்களுடன் இசையின் தாளத்திற்கு இணைந்து கொண்டாடினர். இறுதியாக வானில் வெடித்த வண்ணமயமான பட்டாசுகள் இரவுக் கோளத்தை ஒளிரச் செய்து, ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ விழாவிற்கு கண்கவர் நிகழ்வாக அமைந்தது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













