சற்று முன்

2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளிக்கும் ஆரி!
Updated on : 01 July 2016

நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரி, உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளிக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.



 



"ஆரிமுகம்" என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் கிரியேட்டி ஹெட்டாக ஆரி பொறுப்பேற்றுள்ளார்.



 



இதுதொடர்பில் கூறிய நடிகர் ஆரி, "தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சினிமா இயக்கும் கனவுகளோடு ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகே அவர்களுக்கு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இரண்டு, மூன்று படங்களில் இயக்கத்தைக் கற்றுக்கொண்டு, தான் இயக்குநராவதற்காக பெரிய போராட்டமே வாழ்க்கையோடு நடத்த வேண்டி உள்ளது.



 



அப்படி போராடும் உதவி இயக்குநர்களுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை வழங்க உள்ளேன். அதற்காக ஆரிமுகம் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனம் மூலம் நூறு ஆளுமைகளை சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் சினிமாவின் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன்.



 



பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்கள் கதையை ஒரு பத்து நிமிட குறும்படமாக எடுக்க பெரும் சிரமப்படுகின்றனர். அந்த பத்து அல்லது முப்பது நிமிட குறும்படத்தை எடுப்பதற்கான செலவையும் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் எனது ஆரிமுகம் நிறுவனம் உதவும். மேலும், உதவி இயக்குநராக சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள 1700 பேர் மட்டுமே இந்த நிறுவனத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.



 



இந்த 1700 பேரிலிருந்து ஒருவருக்கு முதலில் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா