சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளிக்கும் ஆரி!
Updated on : 01 July 2016

நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரி, உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளிக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.



 



"ஆரிமுகம்" என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் கிரியேட்டி ஹெட்டாக ஆரி பொறுப்பேற்றுள்ளார்.



 



இதுதொடர்பில் கூறிய நடிகர் ஆரி, "தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சினிமா இயக்கும் கனவுகளோடு ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகே அவர்களுக்கு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இரண்டு, மூன்று படங்களில் இயக்கத்தைக் கற்றுக்கொண்டு, தான் இயக்குநராவதற்காக பெரிய போராட்டமே வாழ்க்கையோடு நடத்த வேண்டி உள்ளது.



 



அப்படி போராடும் உதவி இயக்குநர்களுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை வழங்க உள்ளேன். அதற்காக ஆரிமுகம் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனம் மூலம் நூறு ஆளுமைகளை சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் சினிமாவின் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன்.



 



பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்கள் கதையை ஒரு பத்து நிமிட குறும்படமாக எடுக்க பெரும் சிரமப்படுகின்றனர். அந்த பத்து அல்லது முப்பது நிமிட குறும்படத்தை எடுப்பதற்கான செலவையும் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் எனது ஆரிமுகம் நிறுவனம் உதவும். மேலும், உதவி இயக்குநராக சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள 1700 பேர் மட்டுமே இந்த நிறுவனத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.



 



இந்த 1700 பேரிலிருந்து ஒருவருக்கு முதலில் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா