சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!
Updated on : 12 February 2026

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது. டீசர் கூட வெளியாகாத நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மொத்தமாக ₹225 கோடி மதிப்பிலான விநியோக ஒப்பந்தங்களை கைப்பற்றியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரா–தெலங்கானா சந்தையில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனத்துடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ‘டாக்ஸிக்’ தெலுங்கு மார்க்கெட்டில் புதிய விதிகளை எழுதத் தொடங்கியது.



 



இதனைத் தொடர்ந்து, சர்வதேச விநியோக உரிமைகளை முன்னணி நிறுவனமான Phars Films ₹105 கோடி முன்பணம் கமிஷன் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், ‘டாக்ஸிக்’ மீது உலக சந்தையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழி பதிப்புகளுக்கே பொருந்தும்; ஆங்கில பதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை.



 



Phars Films நிறுவனத்தின் CEO & Founder திரு. அஹமத் கொல்சின் கூறியதாவது..,

 

"டாக்ஸிக்"  மூலம் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் கவரும்  ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த படத்தை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் பெருமை கொள்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களில் இந்தக்கதை கொண்டாடப்படுவதைக்  காண ஆவலாக உள்ளோம். இந்த வெளிநாட்டு வெளியீடு Phars Film-க்கு முக்கிய மைல்கல்லாகும். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் "டாக்ஸிக்" படத்தின்  தீவிரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.”



 



கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட K நாராயணா கூறியதாவது..,

 

"டாக்ஸிக்"  ஒரு உலகளாவிய சினிமா மொழியில் பேசும் படமாக கற்பனை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட அளவிலான கனவுக்கு, உலகளாவிய வலிமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கூட்டணி தேவைப்பட்டது. சர்வதேச சந்தைகளில் இந்திய சினிமாவை வலிமையாக நிலைநிறுத்துவதில் Phars Films தொடர்ந்து அபார திறனை நிரூபித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை மிக்க  வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தில் அவர்களுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவர்களின் பரந்த  மற்றும்  நுணுக்கமான அணுகுமுறையில், "டாக்ஸிக்"  உலகம் முழுவதும் அதற்குரிய அளவிலும் தாக்கத்திலும் வேகத்திலும் கொண்டாடப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது இந்திய சினிமாவின் உலகளாவிய வெளியீட்டில் புதிய அளவுகோல்களை உருவாக்கும்.”



 



உள்நாட்டு (தெலுங்கு) சந்தையில் சாதனை புரிந்த ஒப்பந்தம், ₹105 கோடி வெளிநாட்டு ஒப்பந்தம், மேலும் KGF 2-ன் உலக பாரம்பரியம் — இவற்றின் பின்னணியில் "டாக்ஸிக்"  வெளியீட்டுக்கு முன்பே உலகளாவிய பெரும் நிகழ்வாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மிகப்பெரிய சர்வதேச அளவிலான தயாரிப்பில் உருவாகியுள்ள "டாக்ஸிக்" , உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, வலுவான VFX, வலுவான கதை உலகம், மற்றும் பெரும் நட்சத்திரக் கூட்டணி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது; இது எதிர்காலத்தில் ₹1000 கோடி மெகா பிளாக்பஸ்டராக மாறும் முன்னோட்டத்தை அளிக்கிறது.



 



யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.



 



தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) -  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்-  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee)  ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.



 



கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதியுள்ள ‘டாக்ஸிக்’, KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் தயாரிப்பாக, ஈத் – உகாதி – குடி பட்வா பண்டிகைகளை முன்னிட்டு மார்ச் 19, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா