சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க ரஜினி காட்டிய அரசியல் தந்திரம்
Updated on : 15 February 2021

கன்னியாகுமரி மாவட்ட துணை செயலர் ஆர்.எஸ்.ராஜன், சிறுபான்மை பிரிவு இணை செயலர் சதீஷ்பாபு, மகளிரணி செயலர் ஈஸ்வரிமதி, ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், கட்டுப்பாட்டை மீறி, ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, ரஜினி மக்கள் நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



 



இது குறித்து, ஆர்.எஸ்.ராஜன் கூறியதாவது,  '' கடந்த 1986ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன். 2017 டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக, ரஜினி அறிவித்தார். இதனால், நான் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த, மாநில விவசாய அணி செயலர் பதவியை ராஜினாமா செய்தேன்.தற்போது ரஜினி, என்னை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை, 800 கோடி ரூபாய்க்கு விற்க, அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி தொடக்கம் என்று அறிவித்தது . கல்லா கட்டுவதில்தான் அவர் குறியாக இருந்தார்.



 



உயிரே போனாலும் தமிழக மக்கள் நலன்தான் முக்கியம் எனக் கூறியவர், பொய்யாக மருத்துவமனையில் படுத்து கொண்டார். என்னை நீக்கியதை நான் சும்மா விடப்போவது இல்லை.இது, என் மனதை பாதித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் பெயரில், 13.50 லட்சம் ரூபாய்க்கு நற்பணிகள் செய்துள்ளேன். மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் . தனது படம் வெற்றி பெற மட்டுமே ரசிகர்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். எங்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார்'' என்று புலம்பி தள்ளியுள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா