சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தால் நல்லது... நிர்மலா சீதாராமன் விளக்கம்!
Updated on : 20 February 2021

வணிகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில உள்ள சாதக பாதகங்கள் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், சாலையோர வியாபாரிகள் கந்து வட்டி கொடுமையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வங்கி மூலம் 10,000 ரூபாய் கடன் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 



 



நாட்டின் வளர்ச்சியை, பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பிரதமர் மோடி கடும் முயற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்டார். கூட்டுறவு பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இன்று முதலிடம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



 



 தமிழகத்தை பொறுத்தவரையில் பொய்ப்பிரச்சார அரசியலை அதிகளவில் மற்றவர்கள் செய்து வருவதாக குறிப்பிட்டார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக் கொள்வார்கள் என்று பொத்தாம் பொதுவாக விவசாயிகள் மத்தியில் தவறான தகவலை அரசியல் லாபத்திற்காக இவர்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.



 



 விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சி இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு சென்று கொள்முதல் பொது விநியோகத்திற்கு ஆபத்து தரக்கூடிய உலக வர்த்தக சட்டத்தில் 2013ஆம் ஆண்டு கையெழுத்துப் போட்டுவிட்டு இன்றைக்கு முதலைக்கண்ணீர் வடிப்பதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால் இங்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.



 



இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சருக்கு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா