சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்
Updated on : 24 February 2021

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்



எல்லா விதைகளும்

விருட்சம் ஆவதில்லை

விருட்சங்கள் எல்லாம்

நிழல் தருவதில்லை...

எங்களின் போதி மரமே! 

உங்களை வணங்குகிறேன்...



 



வேதா இல்லம்

எங்கள் முகவரி மட்டுமல்ல;

இந்த தேசத்தின் முகவரி!



 



வீரம் உங்களிடம்

விலாசம் கேட்கும்

விவேகம் உங்களிடம்

யாசகம் கேட்கும்...



 





மக்களால் நான்;

மக்களுக்காகவே நான்...

வெறும் வார்த்தையல்ல,

வாழ்க்கை!



 



"இதய தெய்வம்"

உதடுகளின் வார்த்தையல்ல

உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று!



 



எதிர்ப்பவர்களுக்கு

நீங்கள் சிம்ம சொப்பனம்;

எளியோர்கள் அமரும் அரியாசனம்.



 



கோபுரங்களைக் காட்டிலும்

குடிசைகளை விரும்பியவர்

நீங்கள். ஆதலால் தான்

அனைவருக்கும் என்றென்றும்

நீங்களே இதய தெய்வம்!



 



மகமே! எங்கள் ஜெகமே!!

உங்களை நினைக்காத

நாளில்லை...

மறந்தால் நாங்கள்

நாங்களில்லை...



 



நீங்கள் ஆள வேண்டுமென

சொன்னதைக் காட்டிலும்

இன்னமும்

நீங்கள் வாழ வேண்டுமென

நாங்கள்

சொல்லியிருக்க வேண்டும் அம்மா!



 



ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களுக்கு சிறந்த நாளாக

அமையும், உங்கள் பிறந்த நாள் இந்த தேசத்திற்கே சிறந்த நாள்!



 



அம்மா! இந்த

மூன்றெழுத்தில்

என் மூச்சிருக்கும்...

அது முடிந்த பின்னும்

ஒலிக்கும் வார்த்தை

அம்மா! அம்மா!! அம்மா!!!





 

உங்கள் பாதையில் எங்கள் பயணம் என்னாளும் தொட

ஆசீர்வதியுங்கள்

அம்மா!!!



 



இப்படிக்கு,

அம்மாவின்

உண்மை விசுவாசி

டி.ஜெயக்குமார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா