சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்
Updated on : 24 February 2021

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்



எல்லா விதைகளும்

விருட்சம் ஆவதில்லை

விருட்சங்கள் எல்லாம்

நிழல் தருவதில்லை...

எங்களின் போதி மரமே! 

உங்களை வணங்குகிறேன்...



 



வேதா இல்லம்

எங்கள் முகவரி மட்டுமல்ல;

இந்த தேசத்தின் முகவரி!



 



வீரம் உங்களிடம்

விலாசம் கேட்கும்

விவேகம் உங்களிடம்

யாசகம் கேட்கும்...



 





மக்களால் நான்;

மக்களுக்காகவே நான்...

வெறும் வார்த்தையல்ல,

வாழ்க்கை!



 



"இதய தெய்வம்"

உதடுகளின் வார்த்தையல்ல

உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று!



 



எதிர்ப்பவர்களுக்கு

நீங்கள் சிம்ம சொப்பனம்;

எளியோர்கள் அமரும் அரியாசனம்.



 



கோபுரங்களைக் காட்டிலும்

குடிசைகளை விரும்பியவர்

நீங்கள். ஆதலால் தான்

அனைவருக்கும் என்றென்றும்

நீங்களே இதய தெய்வம்!



 



மகமே! எங்கள் ஜெகமே!!

உங்களை நினைக்காத

நாளில்லை...

மறந்தால் நாங்கள்

நாங்களில்லை...



 



நீங்கள் ஆள வேண்டுமென

சொன்னதைக் காட்டிலும்

இன்னமும்

நீங்கள் வாழ வேண்டுமென

நாங்கள்

சொல்லியிருக்க வேண்டும் அம்மா!



 



ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களுக்கு சிறந்த நாளாக

அமையும், உங்கள் பிறந்த நாள் இந்த தேசத்திற்கே சிறந்த நாள்!



 



அம்மா! இந்த

மூன்றெழுத்தில்

என் மூச்சிருக்கும்...

அது முடிந்த பின்னும்

ஒலிக்கும் வார்த்தை

அம்மா! அம்மா!! அம்மா!!!





 

உங்கள் பாதையில் எங்கள் பயணம் என்னாளும் தொட

ஆசீர்வதியுங்கள்

அம்மா!!!



 



இப்படிக்கு,

அம்மாவின்

உண்மை விசுவாசி

டி.ஜெயக்குமார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா